லாபக் கண்ணாடி!
தொழில் |
லாபக் கண்ணாடி! |
A blog About Suya SiruTholil Thozhil Munaivor Kaiyedu Malar Vagaigal Maiyam சிறு தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Book In Tamil Language Muyal Fish Mushroom Farming Tamilnadu
தொழில் |
‘மூளை’தனம்
லேட்டஸ்ட் வியாபார உத்திகள்! |
தொழில் |
ஜெயித்தவர்கள் சொல்கிறார்கள்...
ஃபேமிலி பிஸினஸ்... எங்கள் சக்ஸஸ்! |
வாருங்கள்...வழிகாட்டுகிறோம்...!
தொ ழில் சார்ந்த பல்வேறு சேவைகளை அளித்துவரும் டான்ஸ்டியா - எஃப்.என்.எஃப் சேவை மையம், வாரிசுகள் குடும்பத் தொழிலில் ஈடுபடுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கிவருகிறது.
‘‘டைனிங் டேபிளில் குடும்பமாக அமர்ந்து சாப்பிடும்போது பிஸினஸ் பற்றிப் பேசுவது வெளிநாடுகளில் வழக்கம். ஆனால், இங்கே தாங்கள் என்ன தொழில் செய்கிறோம் என்பது தெரியாமலே பிள்ளைகளை வளர்க்கிற பெற்றோர்கள்தான் அதிகம். ‘குடும்பச் சொத்தைப் போலவே குடும்பத் தொழிலிலும் வாரிசுகளுக்குப் பங்கு இருக்கிறது’ என்ற எண்ணத்தை சிறுவயதிலேயே அவர்கள் மனதில் பதிய வைக்கவேண்டும். இதற்காக பிள்ளைகளுக்கு ஓய்வு இருக்கும்போது, பிஸினஸ் நடக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்று காட்டுவதோடு, அதுதொடர்பான விஷயங்களை விளக்கிச் சொல்லவேண்டும்’’ என்றார் அதன் இயக்குநர் சரஸ்வதி.
|
கோவையில் ஒரு கோர்ஸ்!
குடும்பத்தொழிலில் ஈடுபட விரும்பும் வாரிசுகளுக்குப் பயனுள்ள படிப்பாக இருக்கும். பிஸினஸ் அடிப்படை நிர்வாகம், அதிகாரத்தை மாற்றிக் கொடுத்தல், தொழிலாளர்களுடான உறவு, மூத்த பணியாளர்களின் ஒத்துழைப்புடன் பிஸினஸை எப்படி வெற்றிகரமாக நடத்துவது போன்ற அம்சங்களோடு இருக்கப்போகிறது இந்தப் படிப்பு. தென்னிந்தியாவின் மேலாண்மை கல்லூரிகளில் முக்கிய இடத்தில் இருக்கும் பி.ஐ.எம்-மில் படிக்க தவம் கிடக்கிறார்கள் இளைஞர்கள்.
‘‘சில மாதங்களுக்கு முன்பு எங்கள் கல்லூரி செமினாரில் பேசிய ஒரு தேசியத் தலைவர், ‘தந்தையின் நிறுவனங்களை வாரிசுகளால் நிர்வகிக்க முடியாத விஷயம்’ குறித்து கவலைப்பட்டு, எங்களிடம் நீண்ட நேரம் விவாதித்தார். குறிப்பாகச் சொல்லப்போனால் விருதுநகர், சிவகாசி, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை போன்ற ஊர்களில் எல்லாம் சிறிதும் பெரிதுமாக உள்ள பல தொழிலதிபர் குடும்பங்களில் இந்தப் பிரச்னை இருப்பது தெரிந்தது. இதன்பிறகுதான் நாங்கள் ‘ஃபேமிலி பிஸினஸ் மேனேஜ்மென்ட்’ படிப்பின் அவசியத்தை உணர்ந்து, உடனடியாக இந்த கோர்ஸை ஆரம்பிக்க முடிவெடுத்தோம். தொழில்கள் நிறைந்த கோயம்புத்தூரை இதற்கான மையமாகத் தேர்ந்தெடுத்து அங்கு கிளை திறந்துள்ளோம்’’ என்றார் பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் இயக்குநர் சங்கரன்.
‘‘நம் ஊருக்கு ஏற்ற பாடத்திட்டத்துடன் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் செலவழித்து, இதற்கான பாடப் பிரிவுகளை உருவாக்கி இருக்கிறோம். நார்மல் எம்.பி.ஏ பட்டப் படிப்பில் 2 வருடங்களில் 24 பேப்பர்கள் படிக்க வேண்டியிருக்கும். இந்தப் படிப்பில் அதே இரண்டு வருடங்களில் 21 பேப்பர்களோடு தன் தந்தையின் தொழில் பற்றிய ஒரு ‘ப்ராஜெக்ட் ரிப்போர்ட்’ செய்ய வேண்டி இருக்கும். முக்கியமாக இந்தப் படிப்பை படிக்க விரும்புவர்களின் பெற்றோர் ஏதாவது ஒரு தொழில் செய்பவராக இருக்கவேண்டும்’’ என்ற சங்கரன் சிறு இடைவெளிவிட்டு தொடர்ந்தார்,
‘‘ஃபேமிலி பிஸினஸ் மேனேஜ்மென்ட் படிப்பில், ரிஸ்க் எடுத்தால்தான் பிஸினஸில் ஜெயிக்கமுடியும் என்பதை வலியுறுத்துவோம். தன் தந்தையின் தொழிலைக் கவனிக்க வருகிற பலருக்கு பெரிய சவாலாக இருப்பது ‘ஒர்க்கிங் கேப்பிட்டல்’ எனப்படும் முதலீட்டைக் கையாள்வதுதான். பணத்தை பேலன்ஸ் செய்யும் வித்தை தெரியாததினால்தான் நிறையப்பேர் வட்டிக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு, கடைசியில் நிறுவனத்தையே காவு கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படி அடிப்படையான நிர்வாகவியல் மற்றும் பிஸினஸ் நுட்பங்களோடு உலகளாவிய மேலாண்மை நுட்பங்களையும் அவர்களுக்கு அடையாளம் காட்டப்போகிறோம். இந்த அடிப்படையான ‘தியரி’ விஷயங்களைக் கற்பதன் மூலம் தந்தையின் நிறுவனத்தை செம்மைப்படுத்தி, செழிப்பாக வளர்க்கும் வித்தை அவர்களுக்கு பிராக்டிகலாக கைகூடிவிடும்’’ என உற்சாகமாக முடித்தார் சங்கரன்.
- மு.தாமரைக்கண்ணன்
படம்: எஸ்.சாய்தர்மராஜ் |
தொழில் |
வியாபாரத்துக்கு முன் அஸ்திவாரப்பணிகள்! |
வருமானத்தைப் ‘பெருக்கலாம்’!
‘‘நம் மாநிலத்தில் தென்னைமரம் இல்லாத ஊர் கிடையாது. அதனால், இந்த தென்னந்துடைப்பம் தொழிலுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கப் போவதில்லை. சிறிய அளவில் தொழில் தொடங்க நினைப்பவர்கள் தாராளமாக இந்தத் தொழிலில் இறங்கலாம்’’ என்று நம்பிக்கை கொடுக்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த பைசுல் ஹுசைன்.
இந்த சுற்றுவட்டாரத்தில் மட்டும் 10 துடைப்பம் மண்டிகள் இருக்கின்றன. இங்கு தயாராகும் தென்னந்துடைப் பங்கள் வட மாநிலங்களில் ஏக பிரசித்தம்.
40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும், குறைந்தபட்சம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கலாம். மழைக் காலம் தொழில் நடத்த ஏதுவாக இருக்காது.
இந்தத் தொழிலின் தன்மை பற்றி விவரித்தார் பைசுல்ஹுசைன். ‘‘வீடு, தோப்புகளில் கிடைக்கும் தென்னங்கீற்றுகளில் இருந்து கிழித்து எடுக்கப்பட்ட குச்சிகளைச் சேர்த்துக்கட்டி, துடைப்பமாக்கி வைப்பார்கள். அதை இரண்டு அல்லது மூன்று ரூபாய் கொடுத்து வாங்கி மொத்த வியாபாரிகளுக்குக் கொடுத்து லாபம் பார்க்கும் சிறு தொழிலாளிகளும் இருக்கிறார்கள்.
சுமார் அரைக்கிலோ எடை நிற்கும் துடைப்பத்தை வாங்கி வந்து மொத்த வியாபாரியிடம் கொடுக்கும்போது அவர்கள் எடைபோட்டுத்தான் எடுக்கிறார்கள். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் எட்டு ரூபாய் கிடைக்கிறது. ஆக, ஒரு துடைப்பத்துக்கு லாபமே இரண்டு ரூபாய்க்குக் குறையாமல் கிடைக்கும். ஒரு நாளில் 200 துடைப்பங்களைக்கூட சேகரிக்கிறார்கள். அவர்களுடைய தினசரி வருமானம் 300 முதல் 400 ரூபாயாக இருக்கிறது. செலவுகள் எல்லாம் போக லாபமாக குறைந்தபட்சம் 250 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்’’ என்றார்.
ஒரு பண்டலின் விலை 300 முதல் 800 ரூபாய் வரையில் தரத்துக்கு ஏற்ப அமைகிறது. ஃபார்வேர்டிங் ஏஜென்ட்களுக்கு 3% கமிஷன் கொடுத்தாலும் மொத்த வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
இதில் துடைப்பங்களை அடுக்கி வைப்பதற்கு இடம், அதை தரம்வாரியாக பிரித்து சுத்தம் செய்வதற்கு வேலையாட்கள் என்கிற அளவில் சிறு முதலீடு செய்ய வேண்டியிருக்கும்’’ என்றார்.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் துடைப்பங்களுக்கான சீசன் உச்சத்தில் இருக்கும். மழைக்காலம் தவிர்த்த மற்ற மாதங்களிலும் நிரந்தர வருமானம் கிடைக்கக்கூடிய தொழில் இது.
அதோடு, சராசரியாக 100 பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கக்கூடிய தொழிலாக இருக்கிறது.
சுத்தமாக இருக்கப் பயன்படுத்தும் துடைப்பங்கள் நமக்குச் சோறு போடும் என்பது இந்தத் தொழிலுக்கு நிச்சயம் பொருந்தும்!
சீமாறு |
தொழில் |
‘ மூளை’தனம்
நல்ல ஐடியா முதலீடைத் தரும்! |