Thursday 22 July 2010

Palangal kaargarigal Pathapaduthuvathu Eppadi |ஆர்வம் இருக்கிறதா... அள்ளுங்க வாய்ப்பை! |டின்களில் பழரசம், ஜாம் பதபடுத்தல் தொழில்,

 Palangal kaargarigal Pathapaduthuvathu Eppadi |ஆர்வம் இருக்கிறதா... அள்ளுங்க வாய்ப்பை! |டின்களில் பழரசம், ஜாம் பதபடுத்தல் தொழில், 

ஆர்வம் இருக்கிறதா... அள்ளுங்க வாய்ப்பை!

தொழில்
சுய தொழில்
ஆர்வம் இருக்கிறதா...
அள்ளுங்க வாய்ப்பை! 
தொ ழில் தொடங்க ஆசைப்படுபவர் களுக்கு வாய்ப்பு தரும் வளமான நிலமாக இருக்கிறது கோவை, வேளாண் பல்கலைக்கழகம்.
வேளாண் பல்கலைக்கழகம் தந்தாலும் இது விவசாயத் தொழில் வாய்ப்பு இல்லை... உணவுப் பொருள் சார்ந்த தொழிலைத்தான் ஊக்குவிக்கிறது பல்கலைக் கழகம். கனடா நாட்டின் சர்வதேச மேம்பாட்டு முகமை உதவி யுடன் நடத்தப்படும் இந்தத் திட்டம் பற்றிப் பேசினார், அதைச் செயல்படுத்தும் தொழில் நுட்ப மையத்தின் தலைவராக இருக்கும் பேராசிரியர் தங்கவேல்.
‘‘குறைந்த மூலதனத்தில் சுயமாகத் தொழில்செய்ய விருப்பம் உள்ளவர் களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை முன்னேற்றும் திட்டம் இது!
இந்தப் பயிற்சித் திட்டதில் சேர, வயது வரம்பு, கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. தொழில் செய்வதற்கான குறைந்தபட்ச முதலீடு, உழைப்பதற்கான உற்சாகம், முயற்சி போதும்!
இங்கு அளிக்கப்படும் பயிற்சிகள், பாட்டில் மற்றும் டின்களில் பழரசம், ஜாம் போன்ற உணவுப் பொருட்களை பதப்படுத்தி அடைத்து அனுப்புவது எப்படி? என்பதுதான்!
பேக்கரி மற்றும் கன்ஃபெக்ஷனரி தயாரிப்புகள், மசாலா பொடி போன்ற சமையல் பொருட்களையும் தயாரிக்க பயிற்சி அளிப்பதோடு அவற்றை மார்க்கெட்டிங் செய்வது தொடர் பான ஆலோசனைகளும் வழங்கு கிறோம்’’ என்றார் தங்கவேல்.
ஒரு மாத பயிற்சி, 10,000 ரூபாய் கட்டணம் என்பதாக இருக்கிறது இந்தப் பயிற்சிமுறை! பயிற்சி முடிந்தபின் வழங்கப்படும் சான்றிதழை வைத்து வங்கிக் கடன் பெற்று சுயமாகத் தொழில் தொடங்கலாம்.
‘‘பெரிய இயந்திரங்களை நிறுவித்தான் தொழிற்சாலையை ஆரம்பிக்க வேண்டும் என்பதில்லை. எங்கள் மையத்தில் உறுப்பினர் களாகச் சேர்ந்து, குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்திவிட்டு எங்களிடம் உள்ள பதப்படுத்து தலுக்குத் தேவையான இயந்திரங் களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுயமாக இதுபோன்ற தொழில் கூடத்தை உருவாக்கவும் ஆலோசனை கள் வழங்குகிறோம். இளைஞர்கள், பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் இதன்மூலம் பயன்பெறு கிறார்கள்’’ என்றார்.
மாதம் தோறும் இருபது நபர்களுக்கு இந்த மையத்தின் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள், ஒரு வாரம், ஒரு மாதம் என்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. இந்தப் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறது பல்கலைக் கழகம்!

பதபடுத்தல் 

1 comment:

  1. Dear sir,
    Pls let me your contect cell nomber.
    Thkg u

    ReplyDelete