Wednesday 3 September 2014

Tellicherry Goat Farm Tamilnadu

Tellicherry Goat Farm - Tholil 

ஆறே மாதத்தில்... 69 ஆயிரம்... அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு...

tellicherry goat for sale in tamilnadu - Tholil

அணுவைக் கொண்டு ஆக்கல், அழித்தல் என்ற இரண்டு வேலைகளையும் செய்வது போலத்தான் தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியும். ஆக்கமா... அழிவா... என்பது நாம் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. அந்த வகையில், இன்றைக்கு சமூகச் சீர்கேடுகளில் ஒன்றாக 'ஃபேஸ்புக்' எனும் 'முகநூல்' விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த முகநூல் மூலமாகவே நண்பர்களாகி, விவசாயத்திலும் ஆடு வளர்ப்பிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள் நான்கு இளைஞர்கள் என்றால், ஆச்சர்ய சங்கதிதானே!

tellicherry goat for sale in tamilnadu

விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார், சிங்கப்பூரில் இருக்கும் ராமசாமி, கோயம் புத்தூரில் இருக்கும் எத்திராஜ், ஓமன் நாட்டில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் ஆகிய நால்வரும் தங்கள் பணிகளுக்கு இடையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்வதுடன், கொட்டில் முறை ஆடு வளர்ப்புத் தொழிலையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
நத்தம்-மதுரை சாலையில் 7-வது கிலோ மீட்டரில் வருகிறது சாத்தாம்பாடிவிலக்கு. இங்கிருந்து இடதுபுறம் திரும்பும் தார்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வருகிறது சாத்தாம்பாடி. சாலையை ஒட்டியுள்ள மாமரங்களுக்கு இடையில் இருக்கிறது இவர்களுடைய பசுமைப் பண்ணை. நாம் அங்கே ஆஜரானபோது... ஆடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த விஜயகுமார், நம்மை உற்சாகத்துடன் வரவேற்றுப் பேசினார்.

tellicherry goat farm in tamilnadu

''எனக்குச் சொந்த ஊரு விருதுநகர். அடிப்படையில ஒரு இன்ஜினீயர். நாலு வருஷமா 'பசுமை விகடன்' படிச்சுட்டு வர்றேன். அதை படிக்கப் படிக்க விவசாயத்து மேல ஆர்வம் வந்துடுச்சு. அதேபோலவே நண்பர்கள் மூணு பேரும் 'பசுமை விகடன்' வாசிக்கறவங்கதான். நாங்க, நாலு பேரும் இன்ஜினீயர்ங்கிற அடிப்படையிலதான் நட்பானோம். ஃபேஸ்புக்ல அப்பப்ப கமெண்ட் போட்டுக்குவோம். அதுல பெரும் பாலும் விவசாயம் தொடர்பான விஷயத்தைப் பத்தித்தான் பேசுவோம். பசுமை விகடன்ல படிச்ச செய்தியைப் பத்தி விவாதிச்சுக்கு வோம்.



பாதை காட்டிய பசுமை விகடன்!
2012 டிசம்பர்ல இருந்து ரொம்ப நெருக்கமான நண்பர்களாயிட்டோம். 2013 ஜனவரியில நாலு பேரும் நேர்ல சந்திக்கத் திட்டமிட்டோம். ராமசாமியின் சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள வடமலா புரத்தில் நாலுபேரும் குடும்பத்தோட ஆஜராகி, ஒருத்தருக்கு ஒருத்தர் மனசுவிட்டு பேசிக்கிட்டோம். அதுவரைக்கும் 'ஃபேஸ்புக்' நண்பர்களா இருந்த நாங்க, அதிலிருந்து குடும்ப நண்பர்களா கிட்டோம். ஒரு கட்டத்துல, 'எல்லாரும் சேர்ந்து ஏன் விவசாயம் செய்யக் கூடாது?'னு முடிவு செஞ்சோம். நண்பர்கள் மூணு பேரும் வெளியூர்ல இருக்கறதால, நான் மட்டுமே பண்ணையைப் பாத்துக் கறதுனு முடிவாச்சு. உடனே ராமசாமியோட மாமியார் தோட்டத்தை, குத்தகைக்கு எடுத் தோம்.
இந்த 40 ஏக்கர் தோட்டத்துல... 20 ஏக்கர் மா, 17 ஏக்கர் தென்னை இதெல்லாம் இருக்கு. இங்க இருக்கற மூணு கிணத்துலயும் தாராளமான தண்ணியும் கிடைக்குது. அதனால, ஒருங்கிணைந்தப் பண்ணையா இதை மாத்த நினைச்சோம். கிணத்துல விரால் மீன் வாங்கி விட்டோம். பிறகு, நாட்டுக்கோழி வளர்க்கலாம்னு 50 கோழிகளையும் வாங்கினோம். அந்த நேரத்துல 'பசுமை விகடன்' தண்டோரா பகுதியில வந்த விளம்பரத்தைப் பாத்துட்டு, திண்டுக்கல், கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துல நடந்த ஆடு வளர்ப்புப் பயிற்சியில கலந்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு, ஆட்டுப்பண்ணை வெக்குற ஆர்வம் வந்துச்சு. பசுமை விகடன் மூலம் அறிமுகமான ஆட்டுப் பண்ணைகள நேர்ல போய் பாத்தோம். பல பண்ணைகளைப் பாத்ததுல... 'தலைச்சேரி ஆடுகளை வாங்கி, போயர்ல கிராஸ் பண்ணி குட்டி எடுத்து வித்தா நல்ல லாபம் வரும்!'னு தெரிஞ்சுக் கிட்டோம்'' என்று சொன்ன விஜயகுமார், அடுத்தக் கட்டமாக நண்பர்களுடன் ஆலோசித்து, களத்திலும் இறங்கியிருக் கிறார்.

tellicherry goat farming

பரண்ல ஆடு... பள்ளத்துல கோழி!
''அம்மன் ஆட்டுப்பண்ணை உரிமை யாளர் சதாசிவத்துகிட்ட ஆலோசனை செஞ்சோம். அவரு சொன்னபடி தென்னைக்கு இடையில, கோ-4, அகத்தி, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29 மாதிரி யான பசுந்தீவனங்களை விதைச்சோம். எடுத்தவுடனே பெருசா பண்ணாம சின்ன அளவுல ஆரம்பிச்சு, நெளிவு, சுளிவுகளைத் தெரிஞ்சுக்கிட்டு பிறகு, பெருசா பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். தீவனப் பயிரெல்லாம் வளர்ந்த பிறகு, ஆட்டுபண்ணைக்கான கொட்டில் அமைச்சோம். கொட்டகையை நானே டிசைன் பண்ணி அமைச்சேன். 60 அடி நீளம், 30 அடி அகலத்துல 5 அடி உயரத் துல கொட்டில் அமைச்சுருக்கோம். உள்ளே குட்டிகளுக்கு தனி அறை, சினை ஆடுகளுக்கு தனி அறை, இனப் பெருக்கத்துக்கு தனி அறைனு பிரிச்சுருக்கோம். ஜி.எல் ஸீட் கூரைதான் போட்டிருக்கோம். இதனால, வெப்பம் அதிகமா உள்ள வராது. ஆஸ்பெஸ்டாஸ் மாதிரி சீக்கிரமா உடையாமலும் இருக்கும். இந்த அளவுல குடில் அமைக்க, 6 லட்ச ரூபாய் செலவாச்சு. கொட்டகை உயரமா இருக்கறதால, பரண்ல ஆடு... பள்ளத்துல நாட்டுக்கோழினு விட்டுட்டோம். சுத்தியும் ஆடுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள நைலான் வலையை வெச்சு அடைச்சுருக்கோம். கீழ விழுற ஆட்டுப் புழுக்கையில உற்பத்தியாகுற புழு, பூச்சிகளைக் கோழிக தின்னுக்கும்.
ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்துடுவோம்!
2013-ம் வருஷம் ஆகஸ்ட் கடைசியில... 30 பெட்டை ஆடு, ஒரு கிடானு வாங்கிட்டு வந்து கொட்டகையில விட்டோம். முப்பது ஆடுகளையும் ஒரே வயசுல வாங்காம, குட்டி, சினையாடு, இனப்பெருக்கத்துக்குத் தயாரா இருக்கற ஆடுனு பல ரகமா வாங்கிட்டு வந்தோம். 6 மாசம் முடிஞ்சுருக்கு. இப்ப கையில
16 குட்டிகள் இருக்கு. காலையில ஏழு மணிக்கு பசுந்தீவனத்தை வெட்டிட்டு வந்து அரை மணி நேரம் ஆறப்போட்டு, பிறகு மெஷின்ல சின்னச்சின்னதா வெட்டுவோம். 9 மணிக்கு மேல பசுந்தீவனத்தைக் கொடுப்போம். அரைமணி நேரம் கழிச்சு தண்ணி வெப்போம். 11 மணி வாக்குல கொட்டகையைவிட்டு கீழ இறக்கி, கொட்டகையைச் சுத்தி இருக்கற காலி இடத்துல காலாற நடக்க விடுவோம். திரும்பவும் ஒரு மணிக்கு கொட்டகையில ஏத்தி, தீவனமும், தண்ணியும் வெப்போம்.


மருத்துவர்கள் ஆலோசனைப்படி மாசம் ஒரு தடவை குடற்புழு நீக்கம் செஞ்சுடுவோம். மருத்துவர்களோட ஆலோசனைப்படி செய்றதால, எந்தத் தொந்தரவும் இல்லாம போயிட்டு இருக்கு.
ஆறே மாசத்துல 16 குட்டிக கிடைச்சது... எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. இன்னும் ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்திடுவோம். ஆட்டுப்புழுக்கை மட்டும் மாசம் ஒரு டன் பக்கமா வருது. அதை பசுந்தீவனங்களுக்கும் தென்னைக்கும் உரமா பயன்படுத்திக்குறோம்'' என்ற விஜயகுமார்,

tellicherry goats

''இப்போதைக்கு எல்லாமே சோதனை முயற்சியாதான் பண்ணிட்டிருக்கோம். இதையே பெரிய அளவுல செய்யுறப்ப... அதிக லாபம் கிடைக்கும்னு நம்புறோம். நாங்க நாலு பேரும் ஆசைப்பட்டபடி இந்தத் தோட்டத்தை சிறந்த 'ஒருங்கிணைந்தப் பண்ணை'யா மாத்துவோம்ங்கிற நம்பிக்கை இப்ப நல்லாவே வந்திருக்கு'' என்றார், பளீரிடும் முகத்துடன்!
எதையும் பிளான் பண்ணி பண்ணனும்!
இவர்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கிவரும் சதாசிவத்திடம் பேசியபோது, ''இன்னிக்கு இருக்கற சூழல்ல விவசாயத்தோட கால்நடை வளர்ப்பையும் செஞ்சாதான் வருமானம் பார்க்க முடியும். பொதுவா ஆடுக இருந்தா வெள்ளாமையைக் கடிச்சுப் போடும்னு ஒரு பயம் இருக்கும். இப்ப அந்த பயமே தேவையில்ல. கொட்டில் முறையில ஆடுகளை வளர்த்தா... ஒரே ஆளு,
100 ஆடுகள் வரை பராமரிக்கலாம். பொதுவா ஆட்டுப்பண்ணைத் தொழில்ல இறங்குற ரொம்ப பேரு தோத்துப் போறதுக்கு காரணம்... முறையான திட்டம் இல்லாதது தான்.
முதல்ல பசுந்தீவனங்களை உற்பத்தி செய்யணும். தீவனம் இல்லாம பண்ணை அமைக்கறதுக்கு இறங்கக் கூடாது. அதேபோல கொட்டகைக்கு அதிக முதலீடு போட்டுட்டு, ஆடு வாங்க காசில்லாம கஷ்டப்படக் கூடாது. முடிஞ்சவரை கொட்டகைச் செலவை குறைச்சா நல்லது. பலரும் எடுத்த எடுப்பிலேயே நூறு ஆடு, இருநூறு ஆடுகனு இறக்கிடுவாங்க. அது ரொம்ப தப்பு. ஆரம்பத்துல இருபது, முப்பது ஆடுகளை வெச்சு, பண்ணையை ஆரம்பிச்சு, நல்ல அனுபவம் வந்த பிறகு அதிகப்படுத்திக்கலாம். தீவனத்தையும், மருந்தையும் சரியா கொடுத்து பராமரிச்சா... ஆட்டுப்பண்ணை மாதிரி லாபமான தொழில் எதுவும் இல்லை.
முதலீடு ரெண்டு மடங்கு அதிகமாகும்! 

கொட்டில் முறையில வளர்க்கறதுக்கு தலைச்சேரிபோயர் கிராஸ் ஆடுகள்தான் சிறந்தது. சீக்கிரம் எடை வரும். இன்னிக்கு நிலமையில வளர்ப்பு ஆடு, உயிர் எடையா கிலோ 350 ரூபாய்க்கும், கறி ஆடு உயிர் எடை 250 ரூபாய்க்கும் போகுது. 30 ஆடுக வாங்க கிட்டத்தட்ட ஒண்ணரை லட்ச ரூபாயும், கொட்டில் அமைக்க நாலு லட்ச ரூபாய், பசுந்தீவனம் மத்த விஷயங்களுக்காக ஒரு 50 ஆயிரம்னு மொத்தம் ஆறு லட்ச ரூபாய் தேவைப்படும். இதுக்கு வங்கிகள்ல கடனுதவியும் கிடைக்குது. பண்ணை ஆரம்பிக்க நினைக்கறவங்க, பல பண்ணை களை நேர்ல போய் பாக்கணும். தரமான ஆடுகளா வாங்கிட்டு வந்து, பண்ணையை ஆரம்பிக்கலாம். ஒரே வயசுள்ள ஆடுகளா வாங்கக் கூடாது. சின்னது பெருசுனு பல வயசுள்ள, தெம்பான, நோய் தாக்குதல் இல்லாத ஆடுகளா பாத்து வாங்கணும்'' என்ற சதாசிவம்,
''ஒரு ஆடு, ஒன்பது மாசத்துல பருவத்துக்கு வரும். அதிலிருந்து 8-வது மாசம் குட்டிப் போடும். ஒரு ஆடு ரெண்டு வருஷத்துல மூணு முறை குட்டிப் போடும். தலைச்சேரி ஆடுக ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிப் போடும். அப்ப ரெண்டு வருஷத்துல ஆறு குட்டி கிடைக்கும். தோராயமா ஆறாயிரம் ரூபாய்க்கு வாங்குற ஆடு மூலமா... ரெண்டு வருஷத்துல 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்டிக கிடைச்சுடும். இப்படி முதலீடு ரெண்டு மடங்கா வேறெந்த தொழில்ல பெருகும்?'' என்று கேட்டார் சிரித்தபடியே!

 ஓமனிலிருந்து ஒரு ஆட்டுப்பண்ணை!
தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் விவசாய ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது பசுமை விகடன். அந்த வகையில், ஓமன் நாட்டிலிருந்தபடி, தன் மனைவி மூலமாக ஆட்டுப் பண்ணைத் தொழிலை மேற்கொண்டிருக்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த மணி. மாஸ்திகவுண்டன்பதி கிராமத்தில்தான் இருக்கிறது, இவருடைய கொட்டில் முறை ஆட்டுப்பண்ணை. 4 போயர் உட்பட 60 தலைச்சேரி ஆடுகளை இதில் வளர்த்து வரும் மணியின் மனைவி தமிழ்ச்செல்வி, ஆடு வளர்ப்புக்கு தாங்கள் மாறிய கதையை கலகலவென சொன்னார்.
''சொந்த ஊரு கோயம்புத்தூருதான். என்னோட கணவர், ஒரு இன்ஜினீயர். அவர், வளைகுடா நாடுகள்ல வேலை பார்க்கறதால... 29 வருஷமா அங்கதான் இருந்தோம். ஓய்வுநேரத்துல 'ஃபேஸ்புக்' பார்க்கற வழக்கம் அவருக்கு உண்டு. அதுலயும் விகடன் குழும இதழ்களோட 'ஃபேஸ்புக்' எல்லாத்தையும் விடாமல் பார்ப்பார். அப்படி பசுமை விகடன் 'ஃபேஸ்புக்' பார்க்க ஆரம்பிச்சதுல, விவசாயம், கால்நடை வளர்ப்பு மேல அவருக்கு ஆர்வம் வந்துடுச்சு.
ஏற்கெனவே இந்த கிராமத்துல தண்ணீர் வசதியோட ஒண்ணரை ஏக்கர் நிலம் எங்களுக்கு இருந்துச்சு. சில வருஷத்துல ஊர் திரும்பி, அதுல வீடுகட்டி குடியிருக்கலாம்னு யோசனை எங்களுக்கு இருந்துச்சு. ஆனா, ஆட்டுப்பண்ணை அமைக்க லாம்கிற ஆர்வம் காரணமா என்னை மட்டும் ஊருக்கு அனுப்பினார். உடனடியா ஆட்டுபண்ணையை உருவாக்கிட்டேன். தினமும் போன் மூலம் தகுந்த ஆலோசனைகளை அங்கிருந்தபடியே சொல்லிட்டு வர்றார் கணவர்'' எனும் தமிழ்செல்விக்கு, ஆட்டுப் பண்ணை அமைக்க, மொத்தம் ஆன செலவு 14 லட்சம் ரூபாய்.

 AATU Pannai

''60 க்கு 40 அடி நீளத்தில் 7 அடி உயரமுள்ள பால்கனி மீது 7 அடி உயரம் கொண்ட செட் அமைச்சு இருக்கோம். தீவனப்புல் 1 ஏக்கர்ல போட்டிருக்கோம். அடர்தீவனமும் கொடுக்கிறோம். பண்ணை அமைச்சு 3 மாசம்தான் ஆச்சு. இப்ப 7 குட்டிகள் புது வரவா வந்திருக்கு. இன்னும் 10 மாசம் கழிச்சுத்தான் வருமான கணக்கு சொல்லமுடியும்.
ஆடுவளர்க்கற அனுபவ விவசாயிகள்கிட்டயும், தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மையம் நடத்தின ஆடுவளர்ப்புப் பயிற்சியிலும் கலந்துக்கிட்டு நிறைய தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப பக்காவான ஆடுவளர்ப்பு விவசாயியா மாறிட்டேன்.  இது மொத்தத்துக்கும் காரணமே பசுமை விகடன்தான்'' என்று ஆட்டுக்குட்டிகளைச் செல்லமாக அணைத்தபடி சொன்னார் தமிழ்ச்செல்வி.
மணியிடம் தொலைபேசி மூலமாக பேசியபோது, ''எனக்கு ரெண்டு பொண்ணுங்க. மூத்தப் பொண்ணுக்கு கல்யாணமாகிடுச்சு. மாப்பிள்ளையும் ஓமன்லதான் வேலை பாக்கறாரு. ரெண்டாவது பொண்ணு, சொந்த ஊர்லயே காலேஜ் படிக்கறா. பசுமை விகடன் படிச்ச பிறகு, 'வெளிநாட்டுல வேலை பாத்தது போதும். சொந்த ஊருக்குப் போய் விவசாயம் பாக்கலாம்’னு முடிவு பண்ணியிருந்தேன். ஆள் பற்றாக்குறை இருக்கறதால, பராமரிப்பு குறைவான, சந்தை வாய்ப்புள்ள ஆடு வளர்ப்புத் தொழிலைத் தேர்ந்தெடுத்திருக்கேன். தீவனம் வெட்டிப் போடுறதுக்கு ஒரு ஆளை மட்டும் வேலைக்கு வெச்சுருக்கோம். பராமரிப்புச் செலவை எந்தளவுக்குக் குறைக்கிறோமோ அந்தளவுக்கு லாபம் அதிகரிக்கும். ஆரம்பத்துல ஒரு ஆட்டுக்கான பராமரிப்புச் செலவு, ஒரு மாசத்துக்கு 14 ரூபாயா இருந்துச்சு. இப்ப 10 ரூபாயா குறைச்சுருக்கோம் (தீவனம் தவிர்த்து). சீக்கிரமே நானும் இந்தியாவுக்குத் திரும்பி, ஆடு வளர்ப்புல முழு கவனம் செலுத்தப் போறேன்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார், மணி

மீன் வளர்ப்பு - Meen Valarpu | Alangara | Vanna Meen Valarpu | Pannai | Kuttai |



  மீன் வளர்ப்பு - Vanna | Alangaara |Meen Valarpu | Pond  Fresh Water  Murrel  Colour Fish Farm Farming Katla Jilapy Kenddai  Kunju Sale Business Plan Videos  Tamilnadu | Pannai

தண்ணீர் வளம் இருக்கு, மண் சரியில்ல; மண் நல்லாருக்கு, தண்ணியும் இருக்கு, ஆனா... வேலைக்கு ஆளுங்க கிடைக்கல - விவசாய நிலத்தை சும்மாவே போட்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் இப்படி ஒவ்வொரு காரணம் தயாரா இருப்பது இங்கே கண்கூடு!
இவர்களுக்கு நடுவே... ''தண்ணி வளமும், குறைஞ்ச ஆள் பலமும் இருந்தாலே போதும், மீன் வளர்ப்புல அருமையான லாபம் சம்பாதிக்க முடியும். இதுக்கு தினமும் அரை மணி நேரம் செலவழிச்சாலே போதும்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார்கள், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள திருஉடையான்பட்டி கணேசன்-சண்முகசுந்தரி தம்பதியர்.
ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுதில் இவர்களுடைய மீன் பண்ணையில் ஆஜரானோம். பரபரப்பாக மீன் விற்பனையிலிருந்தவர்களிடம் நாம், அறிமுகப்படுத்திக் கொள்ள... மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினர்.
''மொத்தம் எட்டரை ஏக்கர் நிலமிருக்கு. தென்னைதான் முக்கிய விவசாயம். வேளாண்மைப் பொறியியல் துறையைச் சேர்ந்தவங்க எங்க தோட்டத்துக்கு வந்து... 'தோட்டத்துல பண்ணைக்குட்டை வெட்டி, மீன் வளர்த்தா நல்ல வருமானம் கிடைக்கும். நிலத்தடி நீரும் அதிகரிக்கும். நாங்களே குட்டை எடுத்துத் தர்றோம்’னு சொன்னாங்க. நாங்க தலையாட்டினதும்... 40 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 5 அடி ஆழத்துல பண்ணைக்குட்டை வெட்டிக் கொடுத்தாங்க. அதுக்கப்பறம் குன்றக்குடி கே.வி.கே. மூலமா மீன் வளர்ப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டு, மீன் வளர்க்க ஆரம்பிச்சுட்டோம்.



மீன் பண்ணை அமைக்க தேவையான மீன் குஞ்சுகள் தேவைக்கு மற்றும் 
ஒரு நாள் மீன் பண்ணையில் நேரடி பயிற்சியும்  நாங்கள் அளிக்கின்றோம் .
தொடர்புக்கு :
Star Global Agri Farms, Mettur , 
Nerinjipettai. ( Erode District)
Salem to Coimbatore,NH-47,Uthamasolapuram,

1)விரால் குஞ்சு (1 இன்ச் - ரூ .2 , 2 இன்ச் ரூ .4) (ஆர்டர் 500 குஞ்சுகள் )
2) கட்லா
3)மிர்கால், 
4)வெள்ளி கெண்டை 
5) புல் கெண்டை, 
6)சாதா கெண்டை
7)ரோகு
சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள மீன் குஞ்சு
 உற்பத்தி மற்றும் விற்பனை பண்ணை , Salem
|
|
|
V



*மீன் பண்ணை அமைக்க விரும்புவோர் நேரில் வந்து மீன் குஞ்சுகள் மற்றும்\அதன் தரத்தினை பார்த்து வாங்கி செல்லவும் 

மீன் குஞ்சுகளை நீங்கள் நேரில் வந்து வாங்கி செல்லலாம் அல்லது வங்கியில்  பணம் செலுத்தினால் ,சேலம் அல்லது ஈரோட்டிலிருந்து  வெளியூர்களுக்கு SECT பஸ் / ட்ராவல்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
*மீன் பண்ணை அமைக்க இடம் உள்ள நபர்கள் எங்களுக்கு தெரிவுபடுத்தவும் .
*தமிழகம் முழுவதும் மீன்கள் மொத்தமாக (1 டன் ,2 டன் ) 
வாங்க ,விற்கஅழைக்கவும் , 

பயிற்சியில் நீங்கள் தெரிந்துகொள்ள இருப்பது 
1)பண்ணை குட்டை எவ்வாறு அமைப்பது ?(குட்டை ஆழம் ,அகலம் )
2)மீன் பண்ணை அமைக்க தேவையான முன் ஏற்பாடுகள் என்னென்னெ ?
3)மீன் வகைகள் என்னென்னெ ? (கெளுத்தி,ரோகு,கட்லா,ஜிலேபி,ஆற )
4)சதுர அடி கணக்கில் குட்டையில் விடப்படும் மீன் குஞ்சுகள் எண்ணிக்கை .
5)மீன் குஞ்சுகளின் வளர்ப்பும் பராமரிப்பும் .
6)மீன்களுக்கு தேவையான தீவனம் தயாரிப்பு .
7)மீன்களுக்கு ஏற்படும் நோய்களும் , அவற்றை தடுக்கும் முறைகளும் .
8)முதலீடு மற்றும் லாப விகிதங்கள் .
9)விற்பனை வாய்ப்பும் ,சந்தை படுத்தும் முறைகளும் .

ஆரம்பத்துல குட்டையில தண்ணியை நிரப்பினதும், தண்ணிய மண்ணு உறிஞ்சிக்கிட்டே இருந்துச்சு. குளத்துக்கரம்பை மண்ணைக் கொண்டு வந்து ஒரு அடி உயரத்துக்கு மெத்தினோம். அப்பறம்தான் தண்ணி நிலைச்சு நின்னுது. இப்ப ரெண்டு வருஷமா மீன் வளர்த்துக்கிட்டிருக்கோம். தீவனம் கொடுக்கறதைத் தவிர வேற எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. குளத்துல தண்ணி மட்டம் குறைஞ்சுடாமப் பாத்துக்கணும். மீனுங்க களவு போகாம பாத்துக்கணும், அவ்வளவுதான்'' என்று சண்முகசுந்தரி ஆரம்ப கதையைச் சொல்ல, அவரைத் தொடர்ந்தார், கணேசன்.



சராசரி 1,200 கிலோ!
'எந்தப் பிக்கல், பிடுங்கலும் இல்லாத அமைதியான, அதேநேரத்துல நல்ல வருமானமும் கொடுக்குற வேலை இது. போன ஆகஸ்ட் மாசம், 350 கெளுத்தி, 500 ரோகு, 500 கட்லா, 300 சில்வர் கெண்டை, 350 புல் கெண்டைனு மொத்தம் 2 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டிருந்தோம். மீன் தீவனத்தை கடைகள்ல வாங்கி போட்டோம். இப்போ ஒன்பது மாசம் ஆகுது. ஒவ்வொரு மீனும் கிட்டத்தட்ட முக்கால் கிலோ எடை வந்துருச்சு. 2 ஆயிரத்துல...
200 செத்திருந்தாலும் 1,800 மீன் வரைக்கும் தேறிடும். எப்படியும் எடை கணக்குல பார்த்தா... மொத்தமா 1,200 கிலோவுக்கு குறையாது. இப்போதான் பிடிச்சு விக்க ஆரம்பிச்சுருக்கோம்.


*தமிழகம் முழுவதும் மீன்கள் மொத்தமாக (1 டன் ,2 டன் ) 
வாங்க ,விற்கஅழைக்கவும் , 
Star Global Agri Farms ,



விற்பனைக்காக நாங்க எங்கயும் அலையறதில்ல. ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் பண்ணையிலயே நேரடி விற்பனை மூலமா எல்லாம் முடிஞ்சுடுது. அக்கம்பக்கத்துல இருக்குறவங்க தேடி வந்து வாங்கிக்குறாங்க. தேவையான அளவுக்கு அப்பப்போ பிடிச்சுக்குறோம். ஒரு கிலோ மீன் 80 ரூபாய்னு விக்குறோம். இதுவரை முன்னூறு கிலோ வித்துருக்கோம். மொத்தமா, 1,200 கிலோ மீன் கிடைக்கும்னு வெச்சுக்கிட்டா... 96 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, செலவுகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் போனாலும்... மீதி 66 ஆயிரம் ரூபாய் லாபம். எங்களைப் பொறுத்தவரை ஏக்கர் கணக்குல விவசாயமெல்லாம் செய்யத் தேவையில்லை. இந்த மாதிரி ரெண்டு குளம் இருந்தாலே... எந்தப்பாடும் இல்லாம ஒரு குடும்பத்துக்குத் தேவையான அளவுக்கு நிறைவா சம்பாதிச்சுட முடியும்'' என்று முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் படரச் சொன்னார்.  
விளையாத மண்ணுக்கு விரால்..! தொழில்
சிவகங்கை மாவட்டம், பாகனேரி பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.இ. வரதராஜன், தனது தோட்டத்தில் மண்வளம் சரியாக இல்லாததால்... மீன் வளர்த்து வருகிறார். தனது மீன் வளர்ப்பு அனுபவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டபோது, ''மொத்தம் 10 ஏக்கர் நிலமிருக்கு. அந்தக் காலத்து வட்டக் கிணறு எப்பவும் தண்ணி குறையாது. நல்ல தண்ணி வசதியிருந்தும், மண்ணு சரியில்லை. கிட்டத்தட்ட எந்தப் பயிரும் வராத ஈழக்களிமண் பூமி. ஓரளவு மண்ணு சுமாரா இருக்கற 6 ஏக்கர் நிலத்துல தென்னையை நட்டு இயற்கை முறையில விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன். குன்றக்குடி கே.வி.கே. ஆலோசனைப்படி சும்மா இருந்த இடத்துல இப்பத்தான் மீன் வளக்க ஆரம்பிச்சிருக்கேன்.
90 அடி நீளம், 35 அடி அகலம்ங்கிற கணக்குல 6 குளங்களை வெட்டியிருக்கேன். ரெண்டு குளத்துல விரால் வளர்க்க முடிவு பண்ணினேன். அதுக்காக நாலு மாசத்துக்கு முன்ன ஒரு குளத்துக்கு
400 ஜிலேபி கெண்டைனு ரெண்டு குளத்துலயும் விட்டேன். அதுக ஓரளவு வளந்துடுச்சு. போன மாசம், குளத்துக்கு 400 விரால் குஞ்சுனு ரெண்டு குளத்துலயும் 800 குஞ்சுகளை விட்டுருக்கேன். ஜிலேபி கெண்டை மீன், தன்னோட முட்டைகளை வாயிலயே அடைகாத்து, 18 முதல் 21 நாள் இடைவெளியில குஞ்சுகளா துப்பிக்கிட்டே இருக்கும். இந்த ஜிலேபி குஞ்சுகளை சாப்பிட்டே விரால் வளர்ந்துடும். இன்னும் 8 மாசம் கழிச்சுதான் எவ்வளவு விரால் கிடைக்கும்னு தெரியும்.
அந்த ரெண்டு குளம் போக, மத்த நாலு குளத்துலயும் மிர்கால், கட்லா, ரோகு மீன்களை ஒவ்வொரு குளத்துக்கும் 400 குஞ்சுகள்ன்ற கணக்குல விட்டுருக்கேன். தினமும் ஒரு மணி நேரம் தீவனம் வெச்சு, குளங்களை ஒரு சுத்து சுற்றி வருவேன். அவ்வளவுதான், வேற எந்த ஜோலியும் இல்லை. ஒவ்வொரு குளத்துக்கும் தினமும் ஒரு கிலோ தவிடு, அரை கிலோ கடலைப் பிண்ணாக்கு, 10 கிலோ சாணம் போடுறேன். கே.வி.கே. யிலிருந்து குருணைத் தீவனம் கொடுத்திருக்காங்க. டேஸ்டுக்காக அப்பப்ப அதையும் கொஞ்சம் சேத்துக்குவேன்.
கிலோ 250 ரூபாய்!
இப்ப வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லா வளந்துட்டு வருது. விரால் மீனுக்கு நல்ல கிராக்கி இருக்கு. கிலோ 250 ரூபாய்க்கு வாங்குறாங்க. நான் குளத்துல விட்டிருக்குற 800 குஞ்சுகள்ல... இழப்பு போக, 300 கிலோ கிடைச்சாலும்... 75 ஆயிரம் ரூபாய்  வருமானம் கிடைக்கும். மத்த குளங்கள்ல கிடைக்குற வருமானம்... செலவு கணக்குல போனாலும்... விரால் மூலமா வர்ற வருமானம் மொத்தமும் லாபமா கிடைச்சுடும். எதுக்கும் உதவாத மண்ணை வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியலையேனு கஷ்டப்பட்ட எனக்கு... இப்படி வழி காட்டிய குன்றக்குடி கே.வி.கே.க்குத்தான் நன்றி சொல்லணும்'' என்று நெகிழ்கிறார் வரதராஜன்.
இப்படித்தான் அமைக்கணும் குளம்!
குன்றக்குடியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கே.வி.கே. (வேளாண் அறிவியல் மையம்). மீன் வளர்ப்பு பற்றிய பயிற்சிகளோடு, தொடர் ஆலோசனைகளையும் கொடுத்து வருவது, இப்பகுதியில் மீன் வளர்ப்பவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. இங்கே, அனைவருக்கும் பயன்படும் வகையில், இம்மையத்தின் விஞ்ஞானி கணேசன், மீன் வளர்ப்பு முறைகளைப் பற்றி விளக்குகிறார்.
செவ்வக வடிவில் குளம்!
''ஆறு, குளம், ஏரி, ஓடை, கசிவுநீர்க் குட்டை மாதிரியான இடங்களுக்கு அருகில் உள்ள நிலங்கள் மீன் வளர்ப்புக்கு ஏற்றவை. அதிக தண்ணீர் வளம் இருந்து, விவசாயம் செய்ய முடியாத நிலங்களிலும் மீன் வளர்க்கலாம். களிமண், வண்டல் மண் சேர்ந்த நிலமாகவும், போக்குவரத்து வசதி உள்ள இடமாகவும் இருந்தால், நல்லது. களிமண் நிலமாக இருந்தால், தண்ணீர் கசிவு இருக்காது. மணல் அதிகமாக உள்ள மண்ணில் கசிவு இருக்கும். கசிவைத் தடுக்க, குளத்தின் தரைப்பகுதியில் ஒரு அடி உயரத்துக்கு களி மண்ணைப் பரப்பி மெத்தி விடவேண்டும். மீன்குளத்தை செவ்வக வடிவத்தில் அமைத்தால், கையாள்வது சுலபம். இருக்கும் இட வசதி, தண்ணீர் வசதி ஆகியவற்றைப் பொறுத்து, குளத்தின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால், ஆழம் ஐந்தடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.  
கரை... கவனம்!

மீன் பண்ணை அமைக்க தேவையான மீன் குஞ்சுகள் தேவைக்கு மற்றும் 
ஒரு நாள் மீன் பண்ணையில் நேரடி பயிற்சியும்  நாங்கள் அளிக்கின்றோம் .
தொடர்புக்கு :
Star Global Agri Farms, Mettur , 
Nerinjipettai. ( Erode District)
Salem to Coimbatore,NH-47,Uthamasolapuram,

1)விரால் குஞ்சு (1 இன்ச் - ரூ .2 , 2 இன்ச் ரூ .4) (ஆர்டர் 500 குஞ்சுகள் ) 
2) கட்லா
3)மிர்கால்
4)வெள்ளி கெண்டை 
5) புல் கெண்டை
6)சாதா கெண்டை
7)ரோகு

மீன் குஞ்சுகளை நீங்கள் நேரில் வந்து வாங்கி செல்லலாம் அல்லது வங்கியில்  பணம் செலுத்தினால் ,சேலம் அல்லது ஈரோட்டிலிருந்து  வெளியூர்களுக்கு SECT பஸ் / ட்ராவல்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பயிற்சியில் நீங்கள் தெரிந்துகொள்ள இருப்பது 
1)பண்ணை குட்டை எவ்வாறு அமைப்பது ?(குட்டை ஆழம் ,அகலம் )
2)மீன் பண்ணை அமைக்க தேவையான முன் ஏற்பாடுகள் என்னென்னெ ?
3)மீன் வகைகள் என்னென்னெ ? (கெளுத்தி,ரோகு,கட்லா,ஜிலேபி,ஆற )
4)சதுர அடி கணக்கில் குட்டையில் விடப்படும் மீன் குஞ்சுகள் எண்ணிக்கை .
5)மீன் குஞ்சுகளின் வளர்ப்பும் பராமரிப்பும் .
6)மீன்களுக்கு தேவையான தீவனம் தயாரிப்பு .
7)மீன்களுக்கு ஏற்படும் நோய்களும் , அவற்றை தடுக்கும் முறைகளும் .
8)முதலீடு மற்றும் லாப விகிதங்கள் .
9)விற்பனை வாய்ப்பும் ,சந்தை படுத்தும் முறைகளும் .

குளத்தின் கரைகளை நீர்க்கசிவு இல்லாத அளவுக்கு பலமாக அமைக்க வேண்டும். வண்டல் மற்றும் மணல் ஆகியவற்றோடு, களி மண்ணையும் கலந்து கரை அமைக்கலாம். கரையின் மேல்புறம் ஒரு மீட்டர் அகலம் அளவுக்கு சமதளமாகவும், இரு புறங்களும் சரிவாகவும் இருக்க வேண்டும். நீர்மட்டத்துக்கு மேல் கால் மீட்டர் அளவுக்கு கரையின் உயரம் இருக்க வேண்டும். கரையின் வெளிப்புறத்தில், தென்னை, பப்பாளி... போன்ற அதிகம் வேர் விடாத மரங்களை நிழலுக்காக நடவு செய்யலாம்.  
பச்சை நிறமே... பச்சை நிறமே!
அடுத்து, குளத்தில் தாவர மிதவைகள் வளர்வதற்கான விஷயங்களைச் செய்ய வேண்டும். குளத்தில் ஒரு அடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்பி, நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை சாணத்தைப் போட வேண்டும். பச்சை சாணத்தை உடனடியாகப் போடாமல்... ஒரு நாள் வைத்திருந்துதான் போட வேண்டும். மழைநீரை நம்பி வெட்டப்படும் குளமாக இருந்தால்... தண்ணீர் நிரப்புவதற்கு முன்பே சாணத்தைப் போட்டு விடலாம். ஐந்து அல்லது ஆறு நாட்களில் சாணம் கரைக்கப்பட்ட தண்ணீர் பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். அந்த சமயத்தில் தண்ணீர் மட்டத்தை நான்கடி அளவுக்கு உயர்த்தி, மீண்டும் நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை அளவுக்கு சாணம் போட வேண்டும். அடுத்த பத்து நாட்களில் தாவர மிதவைகள் உருவாகி விடும். தண்ணீர் பச்சை நிறமாக மாறுவதை வைத்து, இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை மிதவைகள் உருவாகாவிட்டால், வேறு நீர் நிலைகளில் உள்ள பாசிகளை, எடுத்து வந்து போடலாம்.
தாவர மிதவைகள்... கவனம்!
தாவர மிதவைகள், குளத்தில் சரியான அளவுக்கு இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால், பிராண வாயுவின் அளவு குறைந்து மீன்கள் இறந்து விடும் வாய்ப்பும் உள்ளது. குறைவாக இருந்தால், இயற்கை உணவு பற்றாக்குறை ஏற்பட்டு மீன்களின் வளர்ச்சி குறைந்துவிடும். 'தாவர மிதவைகள் சரியான அளவுக்கு உருவாகியிருகின்றனவா?’ என்று பார்ப்பதற்கும் ஒரு வழி இருக்கிறது.
காலை பத்து மணி அளவில் குளத்தில் இறங்கி நின்று கொண்டு, முழங்கை வரை மடித்து, உள்ளங்கையை மேற்புறமாக திருப்பி வைத்துக் கொண்டு... கையைக் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீருக்குள் இறக்க வேண்டும். உள்ளங்கை கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்து மறையத் தொடங்கும். முழங்கைக்கும், தோள்பட்டைக்கும் இடைப்பட்ட புஜப்பகுதி பகுதி மூழ்கும்போது உள்ளங்கை முழுவதுமாக மறைந்தால்... தாவர மிதவைகள் சரியான அளவில் உள்ளன என்று அர்த்தம். தோள்பட்டை பகுதி வரை மூழ்கிய பிறகும், உள்ளங்கை பார்வையில் இருந்து மறையவில்லை என்றால், மிதவைகள் குறைவாக உள்ளன என்று அர்த்தம். முழங்கை மூழ்குவதற்கு முன்பே உள்ளங்கை பார்வையிலிருந்து மறைந்தால், மிதவைகள் அதிகமாக உள்ளன என்று அர்த்தம். இதை வைத்து சரியான அளவைப் பராமரிக்க முடியும்.
மிதவைகளின் அளவு குறைந்திருந்தால்... கொஞ்சம் சாணத்தைக் கொட்டுவதன் மூலம் அதன் அளவை சமப்படுத்திவிடலாம். மிதவைகளின் அளவு அதிகமாக இருந்தால், குளத்தின் நீரை கொஞ்சம் வெளியேற்றி, புது நீரை விட வேண்டும்.
பகுதிக்கேற்ற மீன் ரகங்கள்!
சரியான அளவில் தாவர மிதவைகள் உற்பத்தியான பிறகுதான் மீன் குஞ்சுகளை குளத்தில் விட வேண்டும். ஒரு ஏக்கர் குளத்தில், அதிகபட்சமாக 4 ஆயிரம் மீன்குஞ்சுகள் வரை விட்டு வளர்க்கலாம். மீன்குஞ்சுகளை விடும் முன்பாக, நமது பகுதியில் விற்பனை வாய்ப்பு, குளத்தின் அளவு, தண்ணீர் வசதி போன்றவற்றை வைத்து, வளர்க்க இருக்கும் ரகங்களை முடிவு செய்ய வேண்டும்.
பொதுவாக நமது பகுதியில், கெண்டை வகைகள், விரால், கெளுத்தி என்ற தேளி ஆகிய ரகங்கள்தான் வணிகரீதியாக லாபகரமாக இருக்கின்றன. பத்து மாதங்கள் வரை தொடர்ந்து குளத்தில் நீர் நிறுத்தும் வசதி இருந்தால், கெண்டை மீன்களையும்; ஆறு மாதங்கள் வரை நீர் நிறுத்தும் வசதி இருந்தால் கெளுத்தி மீன்களையும்; நான்கு மாதங்கள் வரை மட்டுமே நீர் நிறுத்தும் வசதி இருக்கும்பட்சத்தில், ஜிலேபி கெண்டை மீன்களையும் வளர்க்கலாம்.  
குஞ்சுகளுக்கு 50 நாள் வயது!
குஞ்சுகளை முடிவு செய்த உடன், 35 முதல் 50 நாட்கள் வயதுள்ள தரமானக் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட வேண்டும். இந்த வயதில் குஞ்சுகள் விரல் அளவுக்கு வளர்ந்திருக்கும். ஒரு குஞ்சு 1 ரூபாய் 50 காசு முதல் 3 ரூபாய் 50 காசு வரை ரகத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. குளத்தின் அளவுக்கேற்ற எண்ணிக்கையில்தான் குஞ்சுகளை வளர்க்க வேண்டும்.
கெண்டை ரகங்களுக்கு ஒரு மீனுக்கு ஒரு சதுர அடி இடம் தேவை. ஒரு சதுர அடியில் 3 முதல் 4 கெளுத்தி மீன்களை வளர்க்கலாம். 25% கட்லா, 15% ரோகு, 20% மிர்கால்,
10% வெள்ளிக்கெண்டை, 10% புல் கெண்டை, சாதா கெண்டை 20% என்ற கணக்கில் கெண்டை மீன் ரகங்களைக் கலந்து வளர்க்கலாம்.
வழக்கத்தை மாற்றக்கூடாது!
மீன்களுக்கு குருணை வடிவிலான சரிவிகித உணவு, ஒரு கிலோ 22 ரூபாய் என்ற விலையில் கடைகளில் கிடைக்கிறது. தவிடு, பிண்ணாக்கைத் தீவனமாகக் கொடுப்பதைவிட இது செலவு குறைவாக இருக்கும். ஒரு மீனுக்கு அதன் உடல் எடையின் அளவில் 2 முதல் 5 சதவிகித அளவுக்கு தினமும் உணவு கொடுத்தால் போதும். மாதத்துக்கு ஒரு முறை கொஞ்சம் மீன்களை பிடித்து, அவற்றின் எடையைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாளுக்கான தீவனத்தை மொத்தமாகக் கொடுக்காமல், இரண்டாகப் பிரித்து காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் கொடுக்க வேண்டும்.
இடத்தையும் நேரத்தையும் மாற்றாமல் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தினமும் தீவனத்தை இட வேண்டும். மீனின் மொத்த எடை எவ்வளவோ... கிட்டத்தட்ட அந்த அளவு தீவனத்தைத்தான் அது சாப்பிட்டிருக்கும் என்பது ஒரு கணக்கு. இதை வைத்து செலவுக் கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு கிலோ எடையுள்ள மீன், அதன் வாழ்நாளில் ஒரு கிலோ முதல் ஒன்றே கால் கிலோ அளவுக்கு தீவனம் சாப்பிட்டிருக்கும். தேளி மீன்கள் ஆறு மாதத்தில் விற்பனைக்கேற்ற வளர்ச்சியை எட்டி விடும். கெண்டை மீன்கள் எட்டு மாதங்களில் வளர்ச்சியை அடைந்து விடும். மீன்கள், முக்கால் கிலோ அளவு எடைக்கு வந்தவுடன் விற்பனையைத் தொடங்கலாம்' என்ற கணேசன் நிறைவாக,
நோய்கள் தாக்காது!
கெண்டை மீன்களைப் பெரும்பாலும் நோய்கள் தாக்குவதில்லை. நீர் மேலாண்மை, தீவன மேலாண்மையைச் சரியாகப் பராமரித்தாலே போதும். விராலுக்கு மட்டும் குளிர் காலத்தில் பூஞ்சண நோய் வரும். இந்நோய் தாக்கிய மீனின் உடம்பில் சாம்பல் பூசியதைப் போல வெண்மையான படலம் படிந்திருக்கும். நாளாக, நாளாக அது புண்ணாகி விடும். பிறகு பாதிக்கப்பட்ட மீன் கீழே இருக்க முடியாமல் நீர்மட்டத்துக்கு மேலே வந்து விடும். சோர்வாக இருக்கும், அப்படி பாதிக்கப்பட்ட மீன்களைப் பிடித்து தனியாக கொண்டு போய் புதைத்தோ அல்லது எரித்தோ விட வேண்டும்.
மஞ்சள், வேப்பிலை ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து, அரைத்துப் பொடித்து அவ்வப்போது குளத்தில் தூவி விட்டால்... இந்நோய் எட்டியே பார்க்காது. அதையும் தாண்டி வந்து விட்டால், ஒரு லிட்டர் ஃபார்மாலின்  திரவத்தை 40 லிட்டர் நீரில் கலந்து குளத்தில் தெளித்தால், சரியாகி விடும்'' என்றார்.

 ஆறு ரகங்களும் இருக்க வேண்டும்!
கெண்டை மீன்களில் கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளி கெண்டை (சில்வர் கார்ப்), புல் கெண்டை, சாதா கெண்டை என ஆறு ரகங்கள் உள்ளன. இந்த ஆறு ரக மீன்களும் தண்ணீரில் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. கட்லா, வெள்ளிக் கெண்டை ஆகியவை குளத்தின் மேல்புறத்திலும், ரோகு, புல் கெண்டை ஆகியவை குளத்தின் நடுப்பகுதியிலும் சாதா கெண்டை, மிர்கால் ஆகியவை குளத்தின் அடிப்பகுதியிலும் வசிக்கும் பழக்கத்தைக் கொண்டவை. அனைத்துப் பகுதிகளிலும் மீன்கள் இருந்தால்தான் அதிக எண்ணிக்கையில் வளர்க்க முடியும்.  
தாவர மிதவைகளில் சில புழு, பூச்சிகளும் உருவாகும். இவற்றை விலங்கின மிதவைகள் என்று சொல்வார்கள். கட்லா மீன்கள் விலங்கின மிதவைகளையும், வெள்ளிக் கெண்டை மீன்கள் தாவர மிதவைகளையும் உணவாக எடுத்துக் கொள்கின்றன. ரோகு மீன்கள் இவை இரண்டையுமே உணவாக எடுத்துக் கொள்கின்றன. புல் கெண்டை மீன்கள் குளத்தில் உள்ள சிறு புற்களை அதிகமாக உண்டு, அவற்றில் செரிக்காதவற்றை வெளியே துப்பும் பழக்கம் கொண்டவை. இப்படி வெளியே துப்பப்படும் உணவை மிர்கால் மற்றும் சாதா கெண்டை மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால், இந்த ஆறு ரகங்களையும் கலந்து வளர்க்கும்போது தீவனம் வீணாகாமல் தடுக்கப்படும்.
 நாமளே தயாரிக்கலாம்...குருணைத் தீவனம்!
ஒரு கிலோ தீவனம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்: சோயாபீன்ஸ் மாவு-210 கிராம், கருவாட்டுத்தூள்-203 கிராம், இறால் கருவாட்டுத்தூள்-200 கிராம், சோளமாவு-173 கிராம், கோதுமை மாவு-200 கிராம், உப்பு-4 கிராம், வைட்டமின் பொடி-7 கிராம். இவை மொத்தம் 997 கிராம் எடை வரும். இவற்றை தண்ணீர் சேர்த்து தயாரிக்கும்போது ஒரு கிலோ எடைக்கு வந்து விடும்.
இந்தப் பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு... கலந்து வைத்துக் கொண்டு அதில், கொதிக்க வைத்து ஆறிய நீரை ஊற்றி 5 நிமிடம் கிளறி, குக்கரில்
5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு, வெந்தக் கலவையை உருண்டைகளாக்கி இடியாப்பம் பிழியும் குழாயில் இட்டு பிழிந்து காய வைத்தால், தீவனம் தயாராகி விடும். அதை கோணியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
 தேளிக்குத் தடையில்லை! tholil
தேளி மீனுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பற்றி பேசிய கணேசன், ''தேளியைத் தடை பண்ணிட்டதா பல பேரு தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க. 'ஆஃப்ரிக்கன் கேட் ஃபிஷ்’னு ஒரு ரக தேளி மீன் இருக்கு. இதோட முள் அதிக விஷத்தன்மை கொண்டது. அதனால் இந்த ரகத்துக்கு மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கெளுத்தி வகையைச் சேர்ந்த தேளிகளுக்குத் தடையில்லை. இவற்றுக்கு அதிக இட வசதி தேவையில்லை என்பதால், தொட்டிகளில்கூட வளர்க்க முடியும். இது சுவை குறைந்து இருப்பதால், அதிக விலைக்கு விற்பனையாவதில்லை'' என்றார்.

Fish Farming Tamilnadu, Meen Valarpu
 மீன் வளர்ப்பு - Meen Valarpu | Pond  Fresh Water  Murrel  Colour Fish Farm Farming Katla Jilapy Kenddai  Kunju Sale Business Plan Videos  Tamilnadu