Tuesday 22 July 2014

சில்லுன்னு ஒரு லாபம்!

சில்லுன்னு ஒரு லாபம்!
தொழில்
 
சில்லுன்னு ஒரு லாபம்!
பெ ப்ஸி, கோக் போன்ற குளிர்பானங்களுக்கு எதிராக ஊரே கிளம்பி நிற்கும் இந்த நேரத்தில், குடிசைத் தொழில் போலப் பரவிக்கிடக்கும் லோக்கல் குளிர்பானத் தயாரிப்பு லாபகரமாக இருக்கிறது!
‘‘சுத்தமான தண்ணீரில் சுகாதாரக்கேடு தராத சுவை கலவைகளைக் கலந்து, பாக்கெட்களில் அடைத்து விற்பனைசெய்வது நல்ல லாபம் தரக்கூடிய தொழில்! குளிர்பானங்களைப் பாக்கெட் செய்யும் மெஷினை வாங்கினால், அதன்மூலம் விதவிதமான சுவைகளில் குளிர்பானங்களைத் தயாரித்துக் கடைகளில் விற்று வருமானம் பார்க்கலாம்’’ என்கிறார் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள சென்னையைச் சேர்ந்த செல்வம். அவருடைய தயாரிப்பு இடம் மிகச்சிறிதாக இருக்கிறது. சுமார் 75,000 ரூபாய் விலை உள்ள இதுபோன்ற ஆட்டோமேடிக் பேக்கிங் மெஷின்கள் ஒரு மணி நேரத்தில் சுமார் 2,500 பாக்கெட்கள் வரை தரக் கூடியவை.
‘‘உள்ளூர் குளிர்பானங்கள் தயாரிக்க உதவும் இந்தக் கலவைக்கான பவுடர் பெரும்பாலான மளிகைக் கடைகளில் கிடைக்கிறது. அதை மொத்த விலையில் வாங்கி, சரியான விகிதத் தில் கலந்து, பாக்கெட் செய்யவேண்டும். அந்தந்த காலக்கட்டத்துக்கு ஏற்ப, தேவையை மனதில்கொண்டு நாம் உற்பத்தி செய்யவேண்டும். கோடைக்காலத்தில் அதிகமான தேவை இருக்கும். அந்தச் சமயத்தில் முழுவீச்சில் வேலைசெய்து அதிக பாக்கெட்களைத் தயாரிக்கலாம். ஆரஞ்சு, சாக்லெட் மில்க், மோர், பாதாம், ரோஸ் மில்க் என்று எல்லா சுவை களிலும் பானங்களைத் தயாரிக்கலாம். மழை மற்றும் குளிர் காலங்களில் கொஞ்சம் கவனமாக ஆர்டருக்கு ஏற்ப தயாரிப்பில் ஈடுபடவேண்டும். சுமாராக ஒருநாளைக்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கக்கூடிய தொழில் இது’’ என்றார் செல்வம்.
மக்கள் நேரடியாக உட்கொள்ளும் உணவுப் பொருள் இது என்பதால், சுகாதார விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இது நாம் சாப்பிடும் பொருள். நம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் பானம் என்பது போன்ற அக்கறையுடன் செயல்படவேண்டும். இதைக் கடைப்பிடித்தால் தரம், சுவைக்காக தேடி வாங்கிச் செல்வார்கள். நல்ல வருமானம் கிடைக்கும்.
தயாரிப்புக்குத் தரும் அளவு முக்கியத்துவத்தை விற்பனை செய்வதிலும் காட்டவேண்டும். இரு சக்கர வாகனம் மூலம் கடைகளுக்கு சப்ளை செய்யத் தயாராக இருக்கவேண்டும். தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் கடைக்காரர்களே தேடிவந்து, வாங்கிச் செல்வார்கள் என்பது இதில் சாதகமான விஷயம். கூடிய வரை கடன் கொடுக்காமல் ரொக்கத்துக்கே வியாபாரம் செய்தால்தான் முதலீட்டு சுழற்சி இருந்துகொண்டே இருக்கும்.
இது குடிசைத் தொழில் வகையில் வருவதால், வங்கிக் கடன்களையும் எதிர்பார்க்க லாம்.
எல்லா ஊர்களிலுமே குளிர்பானங்களுக்கு தேவை இருக்கத்தான் செய்கிறது... வாய்ப்புள்ளவர்கள் தாகம் தீர்க்கத் தயாராகுங்கள். லாபமும் பாருங்கள்!

No comments:

Post a Comment