Wednesday 23 July 2014

Nattu Koli | Sandai | Kattu | Seval Valarpu In Murai | Fighting Cock Food Training Types | Tamil | Nattu Kozhi Valarpu | Nattu Kozhi Pannai in Tamilnadu | Nattu Kozhi Chicks for Sale in Tamilnadu | Business Ideas Tamil

Nattu Koli | Sandai | Kattu | Seval Valarpu In Murai | Fighting Cock Food Training Types | Tamil | Nattu Kozhi Valarpu | Nattu Kozhi Pannai in Tamilnadu | Nattu Kozhi Chicks for Sale in Tamilnadu | Business Ideas Tamil  Nattu Koli (Kozhi) Valarpu In Tamil  | Poultry Farm In Tamilnadu |

Nattu Koli Kozhi Valarpu 

நாட்டுக் கோழி வளர்ப்பு

                                            Muttai Kolil Valarpu
                                          Muttai Koli 

Naatu Kolil Valarpu
Nattu Koli
Kari Koli Valarpu
Kari Koli Valarpu
நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும்நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல்கிராமப்புற மக்களின்அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது

நாட்டுக்கோழிகளை ஏழைகள்பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம்பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணைஎஞ்சியுள்ள தீவனப்பொருட்கள்வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

               தமிழகம் எங்கும் தாரமான நாடுகோழி குஞ்சுகள்   
 தமிழகம் எங்கும் (அணைத்து மாவட்டங்களுக்கும்)         தாரமான நாடுகோழி குஞ்சுகள் தேவைக்கு  

**டோர் டெலிவெரி செய்யப்படும்.
 * நாள் வயதுடைய கோழி குஞ்சு 
 *7 நாட்கள்  வயதுடைய  கோழி குஞ்ச  *15 நாட்கள் வயதுடைய  கோழி குஞ்சுகளும் கிடைக்கும்.

நாட்டு கோழிகள் மொத்தகொள்முதலும்  செய்யப்படும் .


குறைந்த பட்ச ஆர்டர் (100 குஞ்சுகள் )

http://tholilinsurance.blogspot.in/2015/11/birla-sun-life-insurance-co-ltd.html


                           

Nattu Koli Valarpu Nattu kozhi valarpu Seval Sandai - நாட்டுக்கோழி வளர்ப்பு சேவல்




பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, சேவக்கட்டு (சேவல் சண்டை) எனப் பாரம்பரிய விளையாட்டுகள் களைகட்டும். சேவல் சண்டை, பொங்கல் சமயம் மட்டுமல்லாமல் கோயில் விழாக்களின்போதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்... பெருமைக்காக அந்தஸ்துக்காக சண்டைச் சேவல்களை வளர்ப்பவர்களும் உண்டு. பக்கத்து மாநிலங்களில் சண்டைச் சேவலுக்குத் தேவை இருப்பதால், சேவல்களைப் பயிற்றுவித்து விற்பனை செய்பவர்களும் உண்டு.
பெரும்பாலும், சேவல் சண்டைக்கு நம்நாட்டு இனமான அசில் வகை சேவல்களைத்தான் தேர்வு செய்வார்கள். இது நன்கு பெருத்து வளரக்கூடியது என்பதுதான் முக்கிய காரணம். அசில் போலவே பெருத்து வளரக்கூடிய இன்னொரு இனம்... 'சிட்டகாங்’ எனும் நாட்டுரகச் சேவல். இந்த இரண்டு இனங்களையும் கலப்புசெய்து, பெருவட்டு இனக் கோழிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார், திண்டுக்கல் மாவட்டம், காப்பிளியப்பட்டி, பாலமுருகன்.

கட்டுமானத்தொழிலில் இருந்து கால்நடை வளர்ப்புக்கு!
காலை வேளையொன்றில்... கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த பாலமுருகனைச் சந்தித்தோம்.''எங்களுக்கு ஊர்ல ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம்தான் குடும்பத்தொழில். டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, கோயம்புத்தூர்ல பத்து வருஷம் வேலை பாத்தேன். குடும்பத்தை விட்டு பிரிஞ்சே இருந்ததால, குடும்பத்தோட இருக்கணும்னு நினைச்சேன். விவசாயம் பண்ணி பொழைச்சுக்கலாம்னு மூணு வருஷத்துக்கு முன்ன ஊருக்கு வந்துட்டேன். எங்க தோட்டத்துல தண்ணி வசதி இல்லாததால, தென்னம்பட்டியில இருக்கற இந்தத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தேன். கோ.எஃப்.எஸ்-29 தீவனச்சோளம், கோ-4 மாதிரியான பசுந்தீவனப் பயிர்களை விதைச்சு... 16 கலப்பின பால் மாடுகளை வாங்கி, பால் உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கு 250 லிட்டர் பால் கிடைச்சுட்டு இருந்தது. ஆனா, கொஞ்ச நாள்லயே கிணத்துல தண்ணி வத்திடுச்சு. அதனால, தீவனம் உற்பத்தி பண்ண முடியாததால... பத்து மாடுகளை வித்துட்டேன். இப்போ ஆறு மாடு மட்டும் கையில இருக்கு. மாடுகளுக்கு போட்ட ஷெட்டுல, கோழிகளை வளர்க்க லாம்னு தோணுச்சு. அதனால ஒன்றரை வருஷமா கோழிகளை வளர்த்திட்டிருக்கேன்'' என்று  முன்னுரை கொடுத்த பாலமுருகன், தொடர்ந்தார்.
  
நாட்டுக்கோழிக்குத் தேவை அதிகம்!
''ஆரம்பத்துல... 'அழகுக்கோழிகளை வளர்க்கலாம்... நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம்’னு பலரும் ஆலோசனை சொன்னாங்க. நான், நமக்கு பக்கமான ஒட்டன்சத்திரம், அய்யலூர் சந்தைகள்ல எந்தக் கோழிக்கு மார்க்கெட் நல்லாயிருக்குனு பார்த்து, அதைத்தான் வளர்க்கணும்னு முடிவு பண்ணி... சந்தைகளுக்கு அடிக்கடி போயிட்டு வந்தேன். அப்போ, நாட்டுக்கோழிகளுக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும், பெருவட்டு சேவல்களையும், கோழிகளையும் எல்லாரும் விரும்பி வாங்கறதைப் பாத்தேன். குறிப்பா, அசில் சேவல்களுக்கு நல்ல கிராக்கி இருந்துச்சு. விலையும் நல்லா கிடைக்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். 
பெரும்பாலும், அசில் சேவல்களைத்தான் சண்டைக்குப் பயன்படுத்துவாங்க. அதனால, இதுக்கு நல்ல தேவை இருக்கு. நான் ரெண்டு ரகங்களையும் கலந்து கோழிகளை உருவாக்குறப்போ... கோழி, சேவல்கள் நல்ல பெருவெட்டா வருது. இப்போ, கையில அசில், சிட்டகாங் ரெண்டு ரகத்துலயும் சேர்த்து 10 சேவல்கள், 100 கோழிகள்,
100 குஞ்சுகள் வெச்சுருக்கேன். நான் உற்பத்தி பண்ணுன குஞ்சுகளை முதல் தடவை விற்பனை செய்து கிடைச்ச வருமானத்துல... பொள்ளாச்சியில இருந்து நூறு கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை வாங்கிட்டு வந்தேன். அதெல்லாம் இப்போ பருவத்துக்கு வர்ற வயசுல இருக்கு. இது, பழங்குடி மக்கள் வளர்க்கற ரக கோழி. இதோட கறி, கருப்பு நிறத்துலதான் இருக்கும். ரொம்ப மருத்துவ குணம் வாய்ந்த கறி. இந்தக் கோழி நல்ல விலைக்குப் போகும்'' என்ற பாலமுருகன், கடக்நாத் கோழிகளைக் காட்டியபடியே தொடர்ந்தார்.

வளர்ப்புக்கு மட்டும் விற்பனை!

''அசில், சிட்டகாங் கோழிகள் ஒரே மாதிரி இருக்கறதால தானாவே சேர்ந்து இனப்பெருக்கம் செஞ்சுக்கும். ஆனா, கடக்நாத் கோழிகள் அந்த இனத்தோட மட்டும்தான் சேரும். அதனால, இனம் கலக்குறதுக்கு வாய்ப்பில்லை. சராசரியா, இப்போ ஒரு நாளைக்கு பத்து முட்டைகள் கிடைச்சுட்டு இருக்கு. அதை இன்குபேட்டர்ல பொரிக்க வெக்கிறேன். ஊளை முட்டைகள் போக, மாசத்துக்கு சராசரியா 200 குஞ்சுகள் உற்பத்தி ஆகுது. நான் குஞ்சுகளா விக்கிறதில்லை. அம்பது, அம்பத்தஞ்சு நாள் வரைக்கும் வளர்த்துத்தான் விக்கிறேன். அதேமாதிரி, கறிக்காகவும் விக்கிறதில்லை. வளர்ப்புக்காக தாய்க்கோழிகளா மட்டும்தான் விக்கிறேன். சேவக்கட்டுக்காக சேவல்களைத் தனியாவும் வாங்கிக்கிறாங்க'' என்ற பாலமுருகன், பராமரிப்பு முறைகளை விளக்கினார்.
''50 அடி நீளம் 10 அடி அகலத்துல கூரைக் கொட்டகை போட்டிருக்கேன். சுத்தி கம்பி வலை இருக்கு. கோழிகளுக்கு எப்பவும் தண்ணி கிடைக்கற மாதிரி நாசில் பைப் வசதி செஞ்சு வெச்சுருக்கேன். ஷெட்டுக்கு மேல பிளாஸ்டிக் பால் கேனை வெச்சு... அதுல குழாய்களை இணைச்சுருக்கேன். இந்த கேனை தினமும் தண்ணி ஊத்தி நிரப்பி வெச்சுடுவோம். தேவைப்படும்போது கோழிகள் குடிச்சுக்கும். தினமும் காலையில தீவனத்தை தொட்டியில நிரப்பி வெச்சுடுவோம். நாட்டுக்கோழிக்குனு பிரத்யேகமா கம்பெனித் தீவனம் கடைகள்ல கிடைக்குது. அதைத்தான் கோழிகளுக்குக் கொடுக்குறோம். தினமும் சேகரமாகற முட்டைகளை எடுத்து பத்திரப்படுத்திடுவோம்.


ஒவ்வொரு செட்டா இன்குபேட்டர்ல வெச்சு பொரிப்போம். இதுக்காவே தனியா இன்குபேட்டர் ரூம் இருக்கு. இன்குபேட்டர் மூலமா 21 நாள்ல குஞ்சு பொரிஞ்சுடும். அப்பறம் சுத்தப்படுத்திட்டு, அடுத்த செட் முட்டைகளை வெச்சுடுவோம். குஞ்சு பொரிச்சவுடனே ஈரம் காயுற வரைக்கும் இன்கு பேட்டருக்குள்ளேயே வெச்சுடுவோம். அதுக்கப்பறம், அதை புரூடருக்கு மாத்துவோம். தரையில் தவிட்டைப் பரப்பி, அதுக்கு மேல நியூஸ் பேப்பரை விரிச்சு, நாலடி விட்டத்துக்கு வட்டமா அட்டை, பாய் இல்லனா தகரத்தை சுத்தி வெச்சு... இதுல வெப்பத்துக்காக பல்புகளை எரிய விடணும். இதுதான் புரூடர். கூண்டுக்குள்ளகூட இந்த மாதிரி வசதியைப் பண்ணிக்கலாம். இப்போ கரன்ட் அடிக்கடி கட் ஆகறதால, மண் பானைக்குள்ள மூட்டம் போட்டு வெச்சுடுறோம். இது குஞ்சுகளுக்கு கதகதப்பா இருக்கும்.

குஞ்சுகள் பொரிஞ்சு வந்த முதல் நாள், குளுக்கோஸ் தண்ணி மட்டும் கொடுப்போம். ரெண்டாவது, மூணாவது நாள்ல அரைச்ச மக்காச்சோளம் கொடுப்போம். அதுக்கப்பறம், கம்பெனி தீவனம் கொடுக்குறோம். ஒரு மாசம் கழிச்சு குஞ்சுகள கொட்டகைக்கு மாத்திடுவோம். அம்மை, கழிசல் நோய்களுக்கான மருந்துகளை... பிறந்ததுல இருந்து ஏழாம் நாள், பதினஞ்சாம் நாள், இருபத்தோராம் நாள், முப்பத்தஞ்சாம் நாள், அம்பத்தஞ்சாம் நாள்னு முறையா கொடுத்துடுவோம். அதுக்கப்பறம் மாசத்துக்கு ஒரு தடவை மருந்து கொடுப்போம். இதெல்லாம் கட்டாயம் கொடுக்க வேண்டிய மருந்து'' என்று பராமரிப்பு முறைகளை விளக்கிய பாலமுருகன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
ஒரு ஜோடி 1,500 ரூபாய்!
''நல்லா செழிம்பா தீவனம் கொடுத்து வளர்க்கறதால கோழிகள் மூணு மாசத் துலேயே ரெண்டு கிலோ வரைக்கும் எடை வந்துடும். அம்பது, அம்பத்தஞ்சு நாள் வளர்த்துதான் விற்பனை செய்றேன். வளர்ப்புக்கு மட்டுமே கொடுக்கறதால ஒரு ஜோடி 1,500 ரூபாய்னு விற்பனை செய்றேன். மாசத்துக்கு 50 ஜோடி வரைக்கும் விற்பனை செய்றேன். வீட்டுத்தேவைக்கும், ரொம்ப நெருங்கின நண்பர்களுக்கும்தான் கறிக்காக கோழியை எடுத்துக்குவோம். இதெல்லாம் போக மீதியை பண்ணையிலயே வளர்த்துடுவோம். மூக்கு வளைஞ்சு, கிளி மூக்கு மாதிரி இருக்கற சேவல்களை சண்டைக்குப் பழக்க வாங்குவாங்க. இதுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். தீவனச் செலவு, பராமரிப்புச் செலவு எல்லாம் போக நாட்டுக்கோழி மூலமா மாசத்துக்கு சராசரியா அம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது'' என்று சந்தோஷமாகச் சொன்னார் பாலமுருகன்.
நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்

நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும்நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல்கிராமப்புறமக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது
நாட்டுக்கோழிகளை ஏழைகள்பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம்பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணைஎஞ்சியுள்ள தீவனப்பொருட்கள்வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறதுஅதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்துகாணப்படுகிறதுஎனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றிவளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.

நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள்:
வீட்டில் எளிதாக கிடைக்கும் தானியங்களை கொண்டும் தோட்டங்களில் பச்சை புற்களை மேயிந்தும்வளரக்கூடியதுசந்தையில் எப்போதும் நல்ல விற்பனை வாய்ப்புடன் அதிக விலையுள்ள இறைச்சி அதிகமாகதேவைப்படும் ருசியான முட்டைகள் குறைவான செலவில் அதிக லாபம் தரும் தொழில்அவசர பணத்தேவையைபூர்த்தி செய்யும் தொழில்அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதுசுய வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில்கிராமப்புறபெண்களுக்கேற்ற நல்ல பகுதி நேர வேலை வாய்ப்புநாட்டுக் கோழிகளின் அடை காக்கும் தன்மைகுஞ்சுகளைபாதுகாத்து வளர்க்கும் தன்மை சிறந்த உர மதிப்பு எச்சம்.

நாட்டுக்கோழி இனங்கள்:
நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளனஅவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.

குருவுக்கோழி,
பெருவிடைக்கோழி,
சண்டைக்கோழி அசில்கோழி,
கடக்நாத் என்னும் கருங்கால் கோழி,

கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக்,

கொண்டைக்கோழி,

குட்டைக்கால் கோழி.

       உயர்ரக நாட்டுக்கோழி இனம்

நந்தனம்கோழி ஆராய்ச்சி நிலையத்தில் நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு என்ற இருவகை உயரினக்கோழிகள் உற்பத்தி செய்தனர்ஆந்திர மாநிலத்தில் வனராஜா என்ற உயரினக்கோழியை உற்பத்தி செய்தனர்.பெங்களூரு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கிரிராஜா மற்றும் சுவர்ணதாரா என்னும் உயரினக் கோழிகளைஉற்பத்தி செய்து புறக்கடை முறையில்கோழி வளர்ப்பதற்காக நமக்கு கொடுத்துள்ளனர்.
கோழிகள் தேர்வு:
நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில்கவனமுள்ளவையாகவும் இருக்கும் வேகமான நடைவேகமான ஓட்டம்தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல்,சில நேரங்களில் கொக்கரித்தல்கூவுதலுமாக இருக்க வேண்டும்பொதுவாகச் சேவல்கள் இனச்சேர்க்கையில்பிரியமுள்ளவைகளாய் இருக்கும்நல்ல அகலமான நெஞ்சம்நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும்.கோழியின் சுகத்தை கொண்டைல் பார் என்பார்கள்நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக்குறிக்கும்கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும்நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மாரகக்கோழிகளை தேர்ந்தெடுப்பது நல்லதுதேவையான அனைத்து உணவுச்சத்துக்களும் அடங்கிய சரிவிகிதத்தீவனத்தையே எப்பொழுதும் உபயோகிக்க வேண்டும்தீவனத் தொட்டியில் போதுமான இடவசதிகோழிகளுக்குக்கிடைக்கும் வண்ணம் தேவையான எண்ணிக்கையில்தீவனத் தொட்டிகளை வைக்க வேண்டும்தீவனத் தொட்டியின்மேற்புற விளிம்புகோழிகளின் முதுகுப்புறத்திற்கு இணையான நேர்கோட்டில் இருக்கும்படி வயதுக்கு ஏற்பதீவனத்தொட்டியின் உயரத்தை மாற்றி அமைத்துவர வேண்டும்சரிவர அமைக்கப்பட்ட தீவனத் தொட்டிகளை மட்டுமேஉபயோகிக்க வேண்டும்அரைக்கப்பட்ட தீவனத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்குச் சேமித்து வைக்கக்கூடாதுதீவனமூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ளமரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்

நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்
மேய்ச்சல் முறை / புறக்கடை வளர்ப்பு
ஒரு சென்ட் பரப்பளவில் 200 கோழிகள் வளர்கலாம்போதுமான நிழல்பசுந்தீவனம்தீவனம்தண்ணீர்கிடைக்கப் பெறுமாறு செய்திடல் வேண்டும்.
மித தீவிர முறை
கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 700 கோழிகள் வளர்க்கலாம்.கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலைதழைகளை உண்டு வாழும்.
தீவிர முறை
கோழிகளை தரை கூண்டு அல்லது பரண் மேல் விட்டு வளர்ப்பது.
கூண்டு முறை
கம்பிகள் பின்னப்பட்ட கூண்டுகளில் குஞ்சுகள் முதல் கோழிகள் வரை வளர்ப்பது.

"மெய்ச்சல்ல வளர்ந்தாதான் அது நாட்டுக் கோழி "
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் பயிற்சி மைய தலைவர் மற்றும் துணைப்பேராசிரியர் பீர் முகமதுவிடம்நாட்டுக் கோழி வளர்ப்பு பற்றி கேட்டபோது, "பிராய்லர் கோழிகளைத் தவிர்த்துவிட்டுநாட்டுக் கோழிகளை வளர்க்குற விஷயம் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்குஆனாலேயர்பிராய்லர் தீவனத்தைக்கொடுத்து நாட்டுக் கோழிகளை மொத்தமா அடைச்சு வெச்சு வளக்குறப்போ பிராய்லருக்கும் நாட்டுக் கோழிக்கும்வித்தியாசமே இல்லாமப் போயிடும்கம்பெனித் தீவனங்களில் வளர்ச்சி ஹார்மோன்களைத் தூண்டி விடுறதுக்காக சிலவேதிப்பொருட்கள கலக்குறாங்கஅதனால பல பிரச்னைகள் வருதுன்றது எல்லோருக்குமே தெரியும்கம்பெனித்தீவனத்தைச் சாப்பிடுற எந்தக் கோழியா இருந்தாலும்அதுங்களுக்கு ரசாயன பாதிப்பு இருக்கத்தான் செய்யும்அந்தக்கோழி கறியைச் சாப்பிடற மனிதர்களுக்கும் பாதிப்புகள் வரத்தான் செய்யும்அதில்லாம நாட்டுக் கோழிகளுக்கு நோய்த்தாக்குதல் இருக்காதுங்கிறது சரிதான்ஆனாமேய்ஞ்சுதிரிஞ்சு இரையெடுக்குற கோழிகளுக்குத்தான் நோய் வராது.மொத்தமா அடைச்சு வெச்சாகண்டிப்பா நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும்அப்புறம் அதுக்கான மருந்துஊசினுபோடறப்ப... பழையபடி பிராய்லர் கோழி கணக்காத்தான் இருக்கும்இயற்கைச் சூழல்ல மேயவிட்டு வளர்த்தாதான் அதுமுழுமையான நாட்டுக் கோழிமண்ணைக் கிளறிகரையான்புழு பூச்சிகளைப் பிடிச்சு சாப்பிட்டு வளர்றகோழிகளுக்குத்தான் இயற்கையான சுவை இருக்கும்தோட்டங்கள்ல விவசாயத்தோட உபத் தொழிலா நாட்டுக் கோழிவளர்ப்பையும் விவசாயிகள் செய்தா... போதுமான அளவுக்கு நாட்டுக் கோழிங்க கிடைக்க ஆரம்பிச்சுடும்கிராமங்கள்லவீட்டுக்கு வீடு வளர்க்கலாம்புறக்கடை முறையில வீட்டுக்குவீடு நாட்டுக் கோழிங்க வளர்க்குறதை எங்க துறை மூலமாஊக்கப்படுத்திக்கிட்டிருக்கோம்கொஞ்சம் பெரிய அளவுல வளர்க்கணும்னு நினைக்கறவங்கதனித்தனியா 75 சதுரடிஇருக்குற கொட்டகைகள்ல, 10 பெட்டைக்கு 2 சேவல்ங்கிற விகிதத்துல வெச்சு நாமளே தீவனத்தைத் தயார் பண்ணிக்கொடுத்து வளக்கலாம்அந்தக் கோழிகள் மேயுறதுக்காக வலை அடிச்சு கொஞ்ச இடத்தை ஒதுக்கிக் கொடுக்கலாம்.அப்பதான் தரமான நாட்டுக் கோழிகளை உருவாக்க முடியும்இந்த முறையில அடை வெச்சே வருஷத்துக்கு எண்ணூறுகுஞ்சுகளை உற்பத்தி பண்ண முடியும்இதுபத்தின தொழில்நுட்பம் தேவைப்படுறவங்க எங்க ஆராய்ச்சி மையத்துக்குவந்து தெரிஞ்சுக்கலாம்என்று அழைப்பு வைத்தார்.

ஆடுபிராய்லர் கோழிமீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும்அசைவ பிரியர்கள் அதிகம்விரும்புவது நாட்டுக் கோழியை தான்அதன் சுவையே தனிபண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன்வளர்த்தால்நல்ல லாபம் குவிக்கலாம்’ என்கிறார் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி ரூஸ்டர்ஸ் கேட்சர்ஸ் நிர்வாகஇயக்குனர் பாலுஅவர் கூறியதாவதுநாட்டுக்கோழிகளின் முட்டைஇறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளதுஆனால்தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லைகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாகமேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும்பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பதுவழக்கம்விற்பதற்காக வளர்க்காமல்தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள்இதையே தொழிலாக செய்தால் நல்லபார்க்கலாம்.
கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில்நாட்டுக்கோழி வளர்க்கலாம்தினசரி காலை 2 மணி நேரம்மாலை 2 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும்.நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்முட்டையாக வாங்கிகருவிகள்மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின்,அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் தேவைப்படும்பராமரிப்பு முறைகள் பண்ணை வைக்கும்இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாதுஅந்நிய பறவைகள் மூலம்தான்கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளதுபண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாதுசெடிகொடிகள்இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லதுபண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல்பார்த்துக் கொள்ள வேண்டும்கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால்மற்ற சத்தங்கள்கோழிகளை பாதிக்காது.
முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும். 48நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம்எடை அதிகரிக்க குஞ்சுகளின்வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்கேரட்பெரியவெங்காயம் போன்றவற்றைபொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையைபொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம்இதனால் தீவனச்செலவு குறையும்கறியின்ருசியும் அதிகரிக்கும்.

வளர்ப்பது எப்படி?
அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால்வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும்குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காகவளையத்துக்குள்ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும்வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்புமூன்றும்குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும்வட்டத்துக்குள் 2 இஞ்ச்உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பிஅதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும்அதனுள் தீவனத்தொட்டிமற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும்அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம்தினசரி பேப்பரை மாற்றவேண்டியது அவசியம்அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர்நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்றவேண்டும்அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரைமுதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும்இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விடவேண்டும்.
கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாககுஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும்இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும்மொத்தமாக 80 நாட்கள்பூர்த்தியானதும்சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம்கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள்வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
குஞ்சு பொரிப்பு பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள் குஞ்சு வளர்ப்புக்குதகுதியற்றதுஇதர முட்டைகளில் எடை குறைவுஒழுங்கற்ற அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும்மற்றமுட்டைகளை இன்குபேட்டர் மெஷினில் 18 நாட்கள் 99.6 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 70 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதம்உள்ளவாறு வைக்க வேண்டும்ஒரே நேரத்தில் 10 ஆயிரம் முட்டைகளை வைக்கலாம்பின்னர் கேட்சர் மெஷினில் 3நாள் வைத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.

 நாட்டுக்கோழி பராமரிப்பு
இளம் நாட்டுகோழி குஞ்சுகள் பராமரிப்பு ( 1 - 7 வாரம்)
குஞ்சுகளை பெறுவதற்கு முன் கொட்டகைகளில் அடைப்பான்களை அமைக்க வேண்டும்ஒரு அடைகாப்பானில்அதிகபட்சமாக 250 – 300 குஞ்சுகளை வைத்து வளர்க்கலாம்முதல் வாரத்தில் 95 பாரன்கீட் என்றளவில் வெப்பம்பிறகுஒவ்வொரு வாரமும் 5 பாரன்கீட் என்றளவில் வெப்பத்தை குறைத்து கொடுக்க வேண்டும்குஞ்சு பருவ தீவனத்தைகொடுத்து வளர்க்க வேண்டும்சுடவைத்து ஆற வைத்த தண்ணீரை குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டும்நியோ மைசின்,டாக்சி சைக்லின்செபலேக்சின் போன்ற கோழி குஞ்சுகளுக்கு நோய் பாதிப்பை தடுக்க கொடுக்கப்பட வேண்டும்.
வளர் நாட்டுகோழி பராமரிப்பு (8 - 18 வாரம்)
இப்பருவத்தில் கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் புரதசத்தின் அளவு சதவீதம் இருக்க வேண்டும்.எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியாகவும் , நார் சத்தின் அளவு 8 சதவீதத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 17 வது வார துவக்கத்தில் பேன்செல் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகள் காணப்பட்டால் அதை ஒழிப்பதற்கு
 1-2 மி.லி டெல்டா மெத்திரின் என்ற மருந்தை (பியுட்டாக்ஸ்லிட்டர் தண்ணீர் கலந்து கோழிகளின்  தலைப்பகுதிதவிர முக்கி எடுத்தல் வேண்டும்மேலும் கொட்டகைகளிலும் தெளித்து விட வேண்டும்இந்த மருந்து கோழிகளைவெயில் அடிக்கும் மதிய வேளையில் மேற்கொள்ள வேண்டும்பருவநிலை மாற்றத்தின் போது கோழிகளின் சுவாசகோளாறு ஏற்ப்பட்டால் என்ரோ பிலாக்சசின் மில்லி /கோழி என்ற அளவு தண்ணீரில் கொடுக்க வேண்டும்.
முட்டையிடும் நாட்டுக்கோழி பராமரிப்பு ( 18 வாரம் முதல் )
ஒரு கோழி ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் வரை இடும்ஒரு பருவத்தில் 12 – 18 முட்டைகள்இடும்கலப்பின நாட்டுக் கோழியான நாமக்கள் கோழி 1 240 - 280 முட்டைகள் வரை இடும்இப்பருவத்தில் 18 சதவீதபுரதமும், 2700 கிலோ கலோரி எரிசக்தி தீவனம் அளித்தல் வேண்டும்ஒரு முட்டை கோழி தினமும் 240 – 300 மி.லிட்டர்தண்ணீர் குடிக்கும்.

கோடைகால பராமரிப்பு
கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும்ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால்உயிர்வாழ முடியாதுகோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும்கோடை காலங்களில்சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறதுவணிக அளவில் வளர்க்கப் படும்இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவைகோடையில்கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம்அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது.பறவைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும்உடல்வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற இயலாதுஎனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல்சூட்டினை தணித்துக் கொள்ள முடியும்இதற்காக கோழிகளுக்கு பெருமளவு தண்ணீர் தேவைப் படுகிறதுகோடையில்ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க தகுந்த தண்ணீர் கொடுப்பதன் மூலம் குறைக்கலாம்.இத்துடன் தாது உப்புக்களையும் போதிய அளவு சேர்த்துக் கொடுத்தால் வெப்ப அயர்ச்சி குறைபாட்டை நீக்குவதுடன்கோழிகளுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகின்றனதண்ணீரில் நோய் உண்டாக்கும்கிருமிகளின் அளவைக் குறைக்க குளோரின் பவுடர்அயோடின் கலவைகள்ஹைட்ரஜன் பெர் ஆக்சைடுபோன்றவற்றை பயன் படுத்தலாம்இதில் குறைந்த செல வில் குளோரின் வாயுவைப்பெற 1000 லிட்டர் தண்ணீருக்கு 5கிராம் வரை பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தலாம்அயோடின் தயாரிப்புகளை 10 லிட்டருக்கு 1 மிலி வீதம்பயன்படுத்தலாம்தரமற்ற குடிநீர் கோழிக்கு ரத்தக்கழிச்சல்சால்மோனல்லோசிஸ்கோலி பேசில்லோசிஸ் போன்றநோய் பாதிப்புகளை உண்டாக்குவதுடன் அவற்றின் உற்பத்தி திறனையும் குறையச் செய்கின்றனமுட்டையிடும்கோழிகள் முட்டையிட்டவுடன் அதிக அளவு தண்ணீரைக் குடிக்கும்இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காகப் போடப்படும்விளக்குகளை அணைப்பதற்கு முன்னும்அதிக தண்ணீர் அருந்தும்இறைச்சிக் கோழிகளைப் பொறுத்தமட்டில் சூரியஒளி பட்டவுடன் அல்லது செயற்கையாக வெளிச்சம் அளித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும்எனவேகோடையின் வெப்பத் தாக்குதலை உணர்ந்துதகுந்த அளவில்தரமுள்ள தண்ணீர் கோழிகளுக்கு வழங்க வேண்டும்.

 குளிர்கால பராமரிப்பு
சிமென்ட் தரை கொண்ட கோழி வீட்டில் மரத்தூள்மரஇழைப்பு சுருள்நெல் உமிநிலக்கடலைத் தோல்கரும்புசக்கைதுண்டிக்கப்பட்ட மக்காச் சோளத் தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து கோழிகளைவளர்க்கலாம்ஆழ்கூளமாக உபயோகப்படுத்தும் பொருட்கள் நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும்.மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்மற்றும் ஆழ்கூளத்தை கிளறிவிடும் போதுகாற்றில் எளிதில் உலரக் கூடியதாக இருக்க வேண்டும்கோழி வளர்ப்பில் ஆழ்கூளப் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும்கூளத்தை தினமும் நன்கு கிளறிவிட வேண்டும்கோழி வீட்டின் காற்றோட்டம்கோழிகளின் வயது,எண்ணிக்கைஎடை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றினை பொருத்து ஆழ் கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகிகெட்டியாகிவிடும்மேலும் அமோனியா வாயு உற்பத்தி ஆகி கோழிகளுக்கு கண் எரிச்சல்சுவாச நோய்கள் பாதிப்புஆகியவை ஏற்படுவதோடு அல்லாமல் ரத்த கழிச்சல் நோயும் அதிகரிக்க வாய்ப்பு உண்டுஇதன் விளை வாககோழிகளின் இறப்பு விகிதம் அதிகமாவதோடு பாதிக்கப்பட்ட கோழிகள் சரியாக தீவனம் தண்ணீர் சாப்பிடாமல்வளர்ச்சிகுன்றிஎடையும் குறைந்து காணப் படும்ஆழ்கூளத்தில் ஈரப்பதம் 25 விழுக்காட்டிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்ஈரம் அதிகமானால் 100 சதுர அடிக்கு 8 முதல் 10 கிலோ சுண்ணாம்புத் தூள் கலந்து தூவிவிட்டுகிளறிவிடுவது நல்லதுமுதல் மூன்று வாரம் வரை ஆழ்கூளப் பொருளை 5 செ.மீஉயரத்திற்கும் மூன்று வாரத்திற்குப்பிறகு 10 செ.மீஉயரத்திற்கும் கோழி வீட்டில் நிரப்ப வேண்டும்ஆழ்கூளத்தை ஒரு நாளைக்கு இரண்டு தடவைகிளறிவிட வேண்டும்.

 100 கோழிகளுக்கு சுமார் 25 லிட்டர் குடிநீர் தேவைப் படும்இளம் கோழிக் குஞ்சு களுக்கு முக்கிய மான எதிரிஅசுத்த மான தண்ணீர் ஆகும்இளம் குஞ்சுகளின் ஆரம்பகால இறப்பு நல்ல குடிநீரை உபயோகப் படுத்தாததினால்ஏற்படுகிறதுஆகவே சுத்தமான குடிநீர் அளிக்க வேண்டும்எந்த இடத்திலிருந்து குடிநீரை எடுக்கிறோமோ அந்தஇடத்தில் எந்தவித கலப்படமும் இல்லாமல் இருக்க வேண்டும்குறிப்பாக சாக்கடை கலப்படம் அல்லது தொழிற்சாலைகழிவு கலக்க வாய்ப்பு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்ஆழ்கிணறு நீராக இருந்தால் கொதிக்க வைக்காமல்அப்படியே நன்கு உபயோகிக்கலாம்அதே சமயம் கிணற்று நீராக இருந்தால் அதனை நன்கு கொதிக்க வைத்துஆறவைத்து கொடுப்பது நல்லதுதரமான பிளீச்சிங் பவுடரை ஆயிரம் லிட்டருக்கு 4 முதல் 7 கிராம் என்ற அளவில்தண்ணீர் அளிப்பதற்கு 8 முதல் 10 மணி நேரத்திற்கு முன்பு கலந்து அவ்வித நீரை கோழிகளுக்கு அளிக்கலாம்.கிணறுகளில் பிளீச்சிங் தூள் போடவேண்டுமென்றால் ஒரு கன அடி நீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் சேர்க்கவேண்டும்குடிநீரை செம்புபித்தளை மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில வைத்திருந்து பின்னர் உபயோகப்படுத்தினால் குடிநீர் குளிர்ந்த நிலையில் இருக்காதுஇளம் வயது குஞ்சுகளுக்குசிறிதளவு தண்ணீர் வெதுவெதுப் பானநிலையில் அளிக்க வேண் டும்குறிப்பாக இரவு நேரங்களில் அதிக குளிர் காரணமாக குடிநீர் குளிர்ந்து விடுவதால் அதைமாற்றி வெதுவெதுப்பான குடிநீர் அளித்திட வேண்டும்அதேபோல் காலையில் குடிநீர் மாற்றும் பொழுதும் புதிதாய்க்கொதித்து ஆறிய வெது வெதுப்பான குடிநீரையே அளிக்க வேண்டும்காலையில் சில நேரங்களில் எட்டு மணிவரையிலும் குளிர் இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்இல்லாவிட்டால் குஞ்சுகள் அதிக அளவில்இறக்க நேரிடும்இளம் குஞ்சுகளுக்கு கொடுக்கப்படும் செயற்கை வெப்பத்தின் கால அளவை குளிர்காலங்களில் மேலும்இரட்டிப்பாக்கி 2 வாரங்கள் கொடுக்க வேண்டும்அதே போல அடைகாப்பானின் மேல் உள்ள மின்சார பல்பின் வாட்அளவை குஞ்சுகளின் தேவைக் கேற்ப அதிகப்படுத்த வேண்டும்மின்சார பல்பின் உயரத்தையும் குஞ்சுகளின் நிலையைஅறிந்து கூட்டவோகுறைக்கவோ செய்ய வேண்டும்வீட்டின் இரு பக்கங்களிலும் கோணிப்பைகளை திரையாக்கி சாரல்மற்றும் பனி உள்ளே வராமல் இரவு முழுவதும் தொங்க விட வேண்டும்அதிக சக்தி வாய்ந்த மின் விளக்குகளை இரவுமுழுவதும் எரியவிட வேண்டும்மேற்கூறிய முறை களை முறை யாக பின்பற்றினால் குளிர்காலத் தில்கோழிப்பண்ணை களில் எவ்வித பாதிப்பும் இல்லா மல் பண்ணையை மேம்படுத் தலாம்


தீவன கலவைக்கு (100 கிலோ கிராம் தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்
 1 மக்காச்சோளம் 40 கிலோ
 2 சோளம் 7 கிலோ
 3 அறிசிகுருணை 15 கிலோ
சோயா புண்ணாக்கு 8 கிலோ
 5 மீன் தூள் 8 கிலோ
கோதுமை 5 கிலோ
அரிசித் தவிடு 12.5 கிலோ
தாது உப்புக் கலவை 2.5 கிலோ
கிளிஞ்சல் 2 கிலோ
மொத்தம் 100 கிலோ
புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறதுஇதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும்அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவுவெகுவாக குறைய வாய்ப்புள்ளதுசிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாககொடுக்கலாம்.

மூலிகை மருத்துவம்
 சின்ன சீரகம் 10 கிராம்
கீழாநெல்லி 50 கிராம்
மிளகு 5 கிராம்
மஞ்சள் தூள் 10 கிராம்
வெங்காயம் 5 பல்
பூண்டு 5 பல்
சிகிச்சை முறை (வாய் வழியாக)
சீரகம் மற்றும் மிளகினை இடித்த பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம்அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும்மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாகஉட் செலுத்தவேண்டும்.



கோழிகளுக்கு சிறந்த தீவனம் அசோலா
அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறதுவிவசாயிகள்அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்கு தீவனமாக வழங்குவதன்மூலம் நல்ல உற்பத்தி பெறலாம்இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் .சுப்பிரமணியன் மற்றும் உதவிப் பேராசிரியர் வெதனுஷ்கோடி கூறியது: "அசோலா தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணிவகையைச் சேர்ந்த தாவரமாகும்இதை விவசாயிகள் உயிர் உரமாக நெல் வயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.சமீபகாலமாக அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறதுஇதில் 25முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளதுகால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்தாது உப்புகள்,வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளனபீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளதுஇச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்துஅதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உண்பது கண்பார்வைக்கு நல்லது.அசோலா உற்பத்தி முறைகள்நிழல்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்திஅமைத்துபாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை சீராக விரிக்கவும்பாலீத்தீன் காகிதத்தின் மேல் 2 செ.மீ.அளவுக்கு மண் இட்டு சமப்படுத்தவும்இதன்மேல் 2 செ.மீஅளவுக்கு தண்ணீர் ஊற்றவும்பின் பாத்தி ஒன்றுக்கு 100கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ அசோலா தாய் வித்து இடவேண்டும்நாள்தோறும் காலை அல்லது மாலைவேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் தண்ணீரில் கரைத்துஅசோலாவிற்கு எளிதாக கிடைக்கும். 15 நாள்களில் ஒரு பாத்தியில் (10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம்) 30 முதல்50 கிலோ அசோலா தாயாராகி விடும்மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியைஅறுவடை செய்யலாம். 10 நாள்களுக்கு 1 முறை பசுஞ்சாணம் கரைப்பது நல்லதுபூச்சித்தொல்லை வந்தால் 5 மில்லிவேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும்அசோலாவின் உற்பத்தி கோடைகாலங்களில் சிறிது குறைந்தும்மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும்மூன்று அல்லது நான்கு பாத்திகள்அமைத்து தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த சுவைமிகுந்தஉணவாகப் பயன்படுத்தலாம்அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கோழிகளுக்குப்பயன்படுத்தலாம்அசோலாவை பச்சைத் தீவனமாக முதன் முதலாகப் பயன்படுத்தும் பொழுது அவற்றை உண்பதற்குதயக்கம் காட்டலாம்ஆகையால் ஆரம்பகட்டத்தில் அசோலாவைத் பிற அடர் தீவனத்துடன் கலந்து கோழிகளுக்குப்தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும்அசோலாவின் பயன்கள்அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை,அல்புமின்குளோபுலின் மற்றும் கரோடின் அளவுஅடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிடஅதிகமாக உள்ளதுஇந்தியாவில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் ஒருங்கிணைந்து பின்பற்றப்படுகிறது.அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறதுமேலும்நெல் விளைச்சலில்இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறதுஎனவேஅசோலா ஒருங்கிணைந்தபண்ணையத்தில் மிக முக்கியமான இடு பொருளாகும்பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமானவெப்பநிலையான 35 -   36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறதுஆகையால் உயர்ந்த வெப்பநிலையில்அசோலாவின் வளர்ச்சி தடைபடுவதால் உற்பத்தி குறைகிறதுஆகவேமிகவும் வறண்ட பகுதியில் இந்ததொழில்நுட்பத்தைப் பின்பற்றுவது கடினமாகும்.

 நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்
கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால்ஆச்சரியமாகத்தானே இருக்கும்நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது.கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால்கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்றகுஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்தேவையான பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணிஇற்றுப்போன கட்டைமட்டைகாய்ந்த இலைஓலை போன்றநார்ப்பொருட்கள் கரையான் உற்பத்தி செய்முறை மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர்தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும்முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால்மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும்தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள்உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும்கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர்கொடுக்கக்கூடாதுஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானதுகிடைக்கும் கரையானின்அளவு இடத்திற்கு இடம் மாறுபடும்செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும்அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல்எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம்மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாககோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள்இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்கரையான்செயலாற்றும் முறை இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும்மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல்நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும்கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்கநுண்ணுயிரிகள் உண்டுகரையான் சக்திக்கு நார்ப்பொருளையும்புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ளபூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறதுபானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில்தாக்க ஏதுவாக அமையும்கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானைகவிழ்க்கப்படுகிறதுகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்ததுஎறும்புகள்தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்கரையான் சத்து மிக்கது.அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளனசில வகைகரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளதுஇதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது.கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால்காலம் காலமாக தென் தமிழ்நாட்டுமக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டதுஇச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள்ஏற்படுவது தெரியவந்ததுநன்மைகள் கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள்,வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லைபானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனைகரையான்களை கவர்ந்து ஈர்க்கும்ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லைபானையில் வைக்கும் நனைந்தபொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளனகரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக்குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம்அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப்பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவாமுடிவாக கரையான் உற்பத்தி என்ற எளியசெலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.
1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.
2. வீட்டுப் பொருட்கள்மரங்களுக்குப் பாதுகாப்பு.
3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது.
பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறதுஇன்றேசெயல்படுங்கள்மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான்கிடைத்துவிடும்.

செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்
குஞ்சு பொரிப்பகம் உபயோகித்தும் நாட்டு முட்டைகளைப் பொரிக்கலாம்கோழியில் அடை வைப்பதைவிட இதுஇலகுவானதுகோழிகள் வருடத்திற்கு 4 முறை குஞ்சுகள் பொரிக்கும்ஆனால் செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்அதை உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து 12 முறை குஞ்சுகள் பொரிக்கலாம்இவற்றின் மூலம் அதிகமாகக்குஞ்சு பொரிக்க முடியும்குஞ்சுப் பொரிப்பகமானதுசெயற்கை முறையில் தேவையான வெப்பம் மற்றும் ஈரப்பதம்முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொரிக்க உதவும் ஒரு இயந்திரமாகும்இதில் இரண்டு பிரிவுகள் உள்ளனஒன்றுஅடை காப்பான் (Setter) மற்றொன்று பொரிப்பன் (Hatcher) ஆகும்.
முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க கோழி முட்டைஇட்டவுடன் அதை கீழ் கண்டவாறுபாதுகாக்க வேண்டும்.
அதாவது ஒரு இரும்பு சட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் கோணிப்பை போட்டு முடவேண்டும் .முட்டைகளை இதன் மேல் வைத்து பருத்தி துணி கொண்டு முட வேண்டும்.இவ்வாறு பாதுகாத்துவைக்கப்படும் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 97 சதவிகிதம் வரை இருக்கும் .எனவே மேற்கூரிய முறையில்முட்டைகளை சேகரித்தால் அதிக குஞ்சுகள் கிடைக்கும் . சரியான காற்றோட்டம்தட்பவெட்பநிலைஈரப்பதம்முறையாக முட்டைகளை திருப்புதல் மட்டும் இல்லாமல் சுத்தமாக முட்டைகளையும் மட்டும் பொரிபகத்தையும்பராமரிப்பதன் மூலம் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகபடுத்த முடியும் .

 நாட்டுகோழிகளின் நல மேலாண்மை
நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்
1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் - ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்
கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளைகோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள்தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலைதூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளைபரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும்வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்கதடுப்பூசி அவசியம் போட வேண்டும்
கோழி அம்மை நோய் இந்த நோய் பாதித்த கோழிகளில் முதலில் சிறு சிறு அம்மை கொப்புளங்கள் கண்கொண்டை நாசிபகுதி செவி மடல் போன்ற இடங்களில் காணபடுகிறது .பின்பு கொப்புளங்கள் ஏற்பட்ட இடங்களில்வடுக்கள் தென்படும்வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் புண்கள் ஏற்படுவதால் தீவனம் உற்கொள்ள முடியாமல்கோழி இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்நோயை ஆறு வார வயதில் கோழி அம்மை தடுப்பு ஊசி போட்டுகட்டுபடுத்தலாம்.

 7 வது நாள் முட்டைக் கோழிகள் ஆர் டி வி எப் 1 என்னும் இராணிகெட் நோய் தடுப்பு மருந்தினை கண்ணில்மற்றும் மூக்கில் 2 சொட்டுகள் கொடுக்க வேண்டும்
14 வது நாள்  பி டி தடுப்பு மருந்தை கண் சொட்டு மருந்தாக கொடுக்க வேண்டும்
3- வது வாரம் லசோட்டா என்னும் இராணிகெட் நோய் நோய் தடுப்பு மருந்தினை கண் சொட்டு மருந்தாகஉபயோகிக்க வேண்டும்
5- வது வாரம் மீண்டும் லசோட்டா மருந்தினை கொடுக்க வேண்டும் 6- வது வாரம் கோழி அம்மை தடுப்பூசிஇறக்கையில் தோலுக்கு அடியில்(0.5 மில்லிசெலுத்த வேண்டும்
8- வது வாரம் ஆர் டி வி கே / ஆர் பி என்னும் நோய் இராணிகெட் நோய் தடுப்பூசியை இறக்கையில் தோலுக்குஅடியில் மில்லி செலுத்த வேண்டும்
18- வது வாரம் இராணிகெட் நோய் (ஆர் டி வி கேநோய்க்கான தடுப்பூசியை மீண்டும் செலுத்த வேண்டும்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடி தண்ணிரில் லசோட்டா மருந்தினை கலந்து வைக்க வேண்டும்.லசோட்டா கொடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும் .
குறிப்பு:
 தீவனம் அல்லது தண்ணீரில் வைட்டமின் கலவை மருந்துடன் சிறிது சுன்னாம்புதூள் கலந்து கொடுப்பதன்மூலம்முட்டைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதுடன்தோல் முட்டை இடுவதையும் தடுக்கலாம்.

நல்வழி காட்டும் நாட்டுக்கோழி வளர்ப்பு...
கோழிக்குஞ்சு உற்பத்தி மூலமே குதூகல வருமானம்...

கு.ராமகிருஷ்ணன்
படங்கள்: கே. குணசீலன்
 கால்நடை
''நாட்டுக்கோழியை, மேயவிட்டுத்தான் வளக்கணும். பிராய்லர் கோழி மாதிரி கொட்டகைக்குள்ள அடைச்சு வெச்சு கம்பெனி தீவனத்தைக் கொடுத்தா... அதை நாட்டுக்கோழினு சொல்ல முடியாது. 'நாட்டு பிராய்லர் கோழி'னு வேணும்னா சொல்லிக்கலாம். அதேசமயம்... மேய்ச்சல் முறையில அதிகளவு கோழிகளைப் பராமரிக்க முடியாதுங்கறதும் உண்மை. அதனால... அடைப்புடன் கூடிய நடமாடும் முறையில (கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறை) வளர்க்கும்போது, நாட்டுக்கோழிகளைத் தரம் குறையாமலும் ஆரோக்கியமாவும் வளர்க்க முடியுது'' என்று உற்சாகமாக தன் அனுபவத்தைச் சொல்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த துரைசாமி.

Nattu Koli | Sandai | Kattu | Seval Valarpu In Murai | Fighting Cock Food Training Types | Tamil | Nattu Kozhi Valarpu | Nattu Kozhi Pannai in Tamilnadu | Nattu Kozhi Chicks for Sale in Tamilnadu | Business Ideas Tamil

                                       தமிழகம் எங்கும் தாரமான நாடுகோழி குஞ்சுகள்    தமிழகம் எங்கும் (அணைத்து மாவட்டங்களுக்கும்)         தாரமான நாடுகோழி குஞ்சுகள் தேவைக்கு  

**டோர் டெலிவெரி செய்யப்படும்.
 * நாள் வயதுடைய கோழி குஞ்சு 
 *7 நாட்கள்  வயதுடைய  கோழி குஞ்ச  *15 நாட்கள் வயதுடைய  கோழி குஞ்சுகளும் கிடைக்கும்.

நாட்டு கோழிகள் மொத்தகொள்முதலும்  செய்யப்படும் .

http://tholilinsurance.blogspot.in/2015/11/birla-sun-life-insurance-co-ltd.html



கோழிகளுக்குத் தீவனம் போட்டபடியே நம்மிடம் பேச்சைத் தொடர்ந்த துரைசாமி... ''நான் 5 ஏக்கர்ல நெல் விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அதோட கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில ஆடுகளை வளர்க்கலாம்னு வலை வேலியோட கொட்டகை அமைச்சேன். ஆனா, ஆடு வளர்ப்பு எனக்கு சரிப்பட்டு வரல. அதனால, அதை விட்டுட்டேன். சும்மா கிடக்குற கொட்டகையில உருப்படியா ஏதாவது செய்யலாமேனு யோசிப்ப கிடைச்சதுதான்... கோழி வளர்ப்பு!ஆட்டுக்கொட்டகையில் தோன்றிய யோசனை !
நாமக்கல்ல இருக்கற நாட்டுக்கோழிப் பண்ணையில, ஒரு குஞ்சு 35 ரூபாய்னு ஒரு நாள் வயசுள்ள 200 கோழிக்குஞ்சுகள வாங்கிக்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். என்கிட்ட இருந்த கொட்டகையில 100 கோழிகளத்தான் வளர்க்க முடியும். அதனால மூணு மாசத்துல குஞ்சுகள் கொஞ்சம் பெருசானதும் 90 பெட்டை, 10 சேவல்களை மட்டும் வெச்சுக்கிட்டு மிச்சத்தை வித்துட்டேன். குஞ்சுகளை வாங்கிட்டுப் போனவங்க அடிக்கடி வந்து, 'கோழிக்குஞ்சு வேணும்’னு கேட்டாங்க. அப்போதான் குஞ்சுகளுக்கு நிறைய தேவை இருக்குதுனு புரிஞ்சுச்சு. அதுக்கப்பறம் கோழிக்குஞ்சு உற்பத்தியில தீவிரமா இறங்கிட்டேன்.
வாரத்துக்கு 75 குஞ்சுகள் !
பொதுவா, அஞ்சாறு மாச வயசுக்கு மேல ஒண்ணொண்ணா முட்டை போட ஆரம்பிச்சு... 9-ம் மாசத்துல இருந்து முட்டைகள் அதிகளவுல கிடைக்க ஆரம்பிச்சுது. முட்டைகளை இன்குபேட்டர் மூலமா பொரிச்சு விற்பனை பண்றேன். முட்டைகளைத் தனியா விக்கறதில்லை. வாரத்துக்கு அம்பதுல இருந்து 100 குஞ்சுகள் வரைக்கும் உற்பத்தியாகும். ஏதாவது காரணத்தால இறந்தது போக, சராசரியா வாரத்துக்கு 75 குஞ்சுகள வித்துக்கிட்டிருக்கேன்.

மூணு வயசானதுக்கப்பறம் முட்டை உற்பத்தி குறைஞ்சுடும். அதனால மூணு வருஷத்துக்கு ஒரு தடவை தாய்க்கோழிகளை மாத்திடணும். என்கிட்ட உற்பத்தியாகுற குஞ்சுகளையே தனியா வளர்த்து, தாய்க்கோழிகளா  வெச்சுக்குவேன்'' என்ற துரைசாமி, தீவன மேலாண்மை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
செலவைக் குறைக்கும் பசுந்தீவனம் !
ஒரு கோழிக்கு ஒரு நாளைக்கு   120 கிராம்ங்கிற கணக்குல, 100 கோழிகளுக்கும் சேர்த்து தினமும் 12 கிலோ அடர்தீவனம் தேவைப்படும். நான் பசுந்தீவனத்தை அதிகமா கொடுத்து, அடர்தீவனச் செலவைக் குறைச்சுக்கிறேன். 100 கோழிகளுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 4 கிலோ அடர்தீவனம்தான் கொடுக்கிறேன். எருமைப்புல், கிளரிசீடியா, வாதமடக்கி, முள்முருங்கை, அசோலா, குதிரைவாலினு கிடைக்கற தீவனங்கள 15 கிலோ அளவுக்கு கொடுக்கிறேன்.
அதுவுமில்லாம அடர்தீவனத்துக்காகவும் நான் அதிகமா செலவழிக்கறதில்ல. 3 கிலோ சோள மாவு, 800 கிராம் நொய் குருணை, 100 கிராம் கம்பு, 100 கிராம் கேழ்வரகு இதை மட்டும் வெச்சு 4 கிலோ தீவனம் தயாரிச்சுடுவேன். இதுக்கு 60 ரூபாய்தான் செலவாகுது.
காய்கறி கடைகள்ல இலவசமா கிடைக்கக்கூடிய கழிவுகளையும் அப்பப்போ எடுத்துட்டு வந்து கோழிகளுக்கு கொடுக்கிறேன். இதையெல்லாம் கோழிகள் விரும்பி சாப்பிடறதால நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிச்சு, ஆரோக்கியமா இருக்கு. பெருசா நோய்களும் வர்றதில்லை.
பேன்களைத் துரத்தும் மண்குளியல் !
நாட்டுக்கோழிகளுக்கு இயற்கையாகவே மண் குளியல் செய்யுற பழக்கம் உண்டு. றெக்கையை விரிச்சு வெயில்ல காய வெச்சு மண்ணுல போட்டு அடிச்சுக்குறதால தேவையில்லாத ரோமங்கள், பேன்கள்லாம் தானாவே உதிர்ந்துடும். கொட்டில்ல அடைச்சு வெச்சா... மண்குளியலுக்கு வாய்ப்பில்லாமப் போயிடும். கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில கோழிகளுக்கு சுதந்திரமா மேயுற உணர்வும் இருக்கறதால, இயற்கையாவே கோழிகள் ஆரோக்கியமா வளருது. இந்த முறையில எச்சங்களால பரவுற நோய்கள் இந்த முறையில் குறைவா இருக்கு.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா... கொட்டில்ல அடைச்சு வெக்கிறப்போ கோழிகளுக்குள்ள சண்டை வந்து  ஒண்ணை ஒண்ணு கொத்திக்கும். அதுக்காக அலகை வெட்டி விடுவாங்க. ஆனா, கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில இந்தப் பிரச்னை இருக்கறதில்ல. கோழிகளுக்குள்ள சண்டை வந்துச்சுன்னா, பறந்து போய் தப்பிச்சுக்கும். நாட்டுக்கோழிகளோட அலகை வெட்டிவிட்டா, அதுக்கு சந்தையில விலை கிடைக்காதுங்கறதையும் மனசுல வெச்சுக்கணும்'' என்ற துரைசாமி நிறைவாக,
''நான் உற்பத்தி பண்ற குஞ்சுகள பெரும்பாலும் ஒரு நாள் வயசுலயே வித்துடுவேன். ஒரு குஞ்சு 35 ரூபாய்னு வாரத்துக்கு 75 குஞ்சுகள் மூலமா 2,625 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல தீவனச்செலவு, பராமரிப்பு எல்லாம் போக வாரத்துக்கு 2,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. நானே பராமரிச்சுக்குறதால பெரிய அளவுல செலவில்லை. அதனால விவசாயத்தோட சேர்த்து நான் மட்டுமே பாத்துக்குற அளவுக்கு 100 கோழிகளை மட்டும் வெச்சுக்கிட்டிருக்கேன்'' என்றார், உற்சாகமாக.

 இப்படித்தான் வளர்க்கணும்
 கொட்டகையின் நீளம் 20 அடி. அகலம் 10 அடி. தரையில் இருந்து 2 அடி உயரத்துக்கு சுவர்கள் அமைக்கப்பட்டு அதற்கு மேல், 3 அடி உயரத்துக்கு கம்பி வலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை, கீற்றுகளால் அமைக்கப்பட்டுள்ளது. கொட்டகையின் முன்பகுதியில் 40 அடி நீளம், 10 அடி அகலம், 5 அடி உயரத்துக்கு மூன்று புறமும் கம்பிவேலி அமைக்கப்பட்டு, அதன் மீது நைலானாலான மீன் வலை அமைக்கப்பட்டுள்ளது. 100 நாட்டுக்கோழிகளை வளர்க்க, இந்த அளவு போதுமானது.
கோழிகளால் இங்கு தாராளமாக நடமாட முடியும். தேவையான வெயில் கிடைக்கும். அதேசமயம் வெளியேற முடியாது. நிழல் தேவை என்றால், கொட்டகைக்குள் வந்து அடைந்து கொள்ளும். தினமும் காலை 6 மணிக்கு கொட்டகையைத் திறந்து விட்டு, மாலை 6 மணிக்கு கொட்டகைக்குள் கோழிகளை அடைத்து விடலாம். வெளிப்பகுதியில் வேலி அமைக்கப்பட்டுள்ளதால் பாம்பு, காட்டுப்பூனை போன்ற ஜீவராசிகளால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இதை அமைக்க 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
4 மாதம் வரை குஞ்சுத்தீவனம் !    
 பொரித்ததில் இருந்து 15 நாட்கள் வரை ஒரு கோழிக்குஞ்சுக்கு தினமும் சுமார் 5 கிராம் வரை குஞ்சுத்தீவனம் கொடுக்க வேண்டும். அடுத்த15 நாட்களுக்கு தினமும் 10 கிராம் அளவுக்கு குஞ்சுத்தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு மாத வயதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தீவனத்தை அதிகரிக்க வேண்டும். 4-ம் மாதத்திலிருந்து வளர்ந்த கோழிகளுக்கான தீவனத்தை வாங்கிக் கொடுக்கலாம். அல்லது நாமே தயாரித்துக் கொடுக்கலாம்.
கோழிகள் முட்டையிட்ட உடனே, ஒரு மண்பானையில் உமியைப் பரப்பி முட்டைகளை வைத்து ஈரத்துணியால் முடி வைக்க வேண்டும். முட்டைகள் சேர்ந்த பிறகு இன்குபேட்டரில் வைத்துப் பொரிக்க வேண்டும்.
21 நாளில் குஞ்சுகள் பொரித்துவிடும். பிறந்த குஞ்சுகளை சுமார் ஒன்றரையடி உயரம், 4 அடி விட்டத்துக்கு வட்ட வடிவில் அட்டைகளை வைத்து ப்ரூடர் (செயற்கை வெப்பம் ஏற்படுத்தும் விளக்கு) அமைத்து, அதற்குள் விட வேண்டும். ஒரு மாதம் வரை குஞ்சுகளுக்கு பல்பு மூலம் வெப்பம் கொடுக்க வேண்டும்.


Nattu Koli | Sandai | Kattu | Seval Valarpu In Murai | Fighting Cock Food Training Types | Tamil | Nattu Kozhi Valarpu | Nattu Kozhi Pannai in Tamilnadu | Nattu Kozhi Chicks for Sale in Tamilnadu | Business Ideas Tamil

Nattu Koli valarpu Nanmaigal

நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்


புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறதுஅதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்துகாணப்படுகிறதுஎனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றிவளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.

Naatu  Kozhi Valarpu

நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள்:

நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டுமேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும்நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காகமட்டுமில்லாமல்கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது
நாட்டுக்கோழிகளை ஏழைகள்பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம்பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணைஎஞ்சியுள்ள தீவனப்பொருட்கள்வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறதுஅதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்துகாணப்படுகிறதுஎனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றிவளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.

( Naatu  Kozhi Valarpu )




Naatu Koli Enangal நாட்டுக்கோழி இனங்கள்

நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளனஅவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.

குருவுக்கோழி,
பெருவிடைக்கோழி,
சண்டைக்கோழி அசில்கோழி,
கடக்நாத் என்னும் கருங்கால் கோழி,

கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக்,

கொண்டைக்கோழி,

குட்டைக்கால் கோழி.

உயர்ரக நாட்டுக்கோழி இனம்

நந்தனம்கோழி ஆராய்ச்சி நிலையத்தில் நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு என்ற இருவகை உயரினக்கோழிகள் உற்பத்தி செய்தனர்ஆந்திர மாநிலத்தில் வனராஜா என்ற உயரினக்கோழியை உற்பத்தி செய்தனர்.பெங்களூரு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கிரிராஜா மற்றும் சுவர்ணதாரா என்னும் உயரினக் கோழிகளைஉற்பத்தி செய்து புறக்கடை முறையில்கோழி வளர்ப்பதற்காக நமக்கு கொடுத்துள்ளனர்.

Nattu Koli Thearvu கோழிகள் தேர்வு:

நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில்கவனமுள்ளவையாகவும் இருக்கும் வேகமான நடைவேகமான ஓட்டம்தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம்பறத்தல்சில நேரங்களில் கொக்கரித்தல்கூவுதலுமாக இருக்க வேண்டும்பொதுவாகச் சேவல்கள் இனச்சேர்க்கையில்பிரியமுள்ளவைகளாய் இருக்கும்நல்ல அகலமான நெஞ்சம்நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும்.கோழியின் சுகத்தை கொண்டைல் பார் என்பார்கள்நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக்குறிக்கும்கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும்நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மாரகக்கோழிகளை தேர்ந்தெடுப்பது நல்லதுதேவையான அனைத்து உணவுச்சத்துக்களும் அடங்கிய சரிவிகிதத்தீவனத்தையே எப்பொழுதும் உபயோகிக்க வேண்டும்தீவனத் தொட்டியில் போதுமான இடவசதிகோழிகளுக்குக்கிடைக்கும் வண்ணம் தேவையான எண்ணிக்கையில்தீவனத் தொட்டிகளை வைக்க வேண்டும்தீவனத் தொட்டியின்மேற்புற விளிம்புகோழிகளின் முதுகுப்புறத்திற்கு இணையான நேர்கோட்டில் இருக்கும்படி வயதுக்கு ஏற்பதீவனத்தொட்டியின் உயரத்தை மாற்றி அமைத்துவர வேண்டும்சரிவர அமைக்கப்பட்ட தீவனத் தொட்டிகளை மட்டுமேஉபயோகிக்க வேண்டும்அரைக்கப்பட்ட தீவனத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்குச் சேமித்து வைக்கக்கூடாதுதீவனமூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ளமரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்

Nattu Koli Valarpu Muraigal  நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்

மேய்ச்சல் முறை / புறக்கடை வளர்ப்பு
ஒரு சென்ட் பரப்பளவில் 200 கோழிகள் வளர்கலாம்போதுமான நிழல்பசுந்தீவனம்தீவனம்தண்ணீர்கிடைக்கப் பெறுமாறு செய்திடல் வேண்டும்.
மித தீவிர முறை
கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 700 கோழிகள் வளர்க்கலாம்.கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலைதழைகளை உண்டு வாழும்.
தீவிர முறை
கோழிகளை தரை கூண்டு அல்லது பரண் மேல் விட்டு வளர்ப்பது.
கூண்டு முறை
கம்பிகள் பின்னப்பட்ட கூண்டுகளில் குஞ்சுகள் முதல் கோழிகள் வரை வளர்ப்பது.

Nattu Kozhi Rasam



Meichala Valarndhaa Dhaan Athu Nattu Koli  "மெய்ச்சல்ல வளர்ந்தாதான் அது நாட்டுக் கோழி "

Naatu Kolil Paramarippu  நாட்டுக்கோழி பராமரிப்பு
இளம் நாட்டுகோழி குஞ்சுகள் பராமரிப்பு ( 1 - 7 வாரம்)
வளர் நாட்டுகோழி பராமரிப்பு (8 - 18 வாரம்)

Muttaiyidum Naatu Koli Paramarippu முட்டையிடும் நாட்டுக்கோழி பராமரிப்பு ( 18 வாரம் முதல் )



கோடைகால பராமரிப்பு

 குளிர்கால பராமரிப்பு


தீவன கலவைக்கு (100 கிலோ கிராம் தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்

Koligalukau Sirantha Theevanam Asola கோழிகளுக்கு சிறந்த தீவனம் அசோலா

 Nattu Koligaluku Karaiyan Theevanam நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்


Seyairkai Muari Kunju Poripagam செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்


Nattu Koligalin Nala Melanmai  நாட்டுகோழிகளின் நல மேலாண்மை



                                    
Nattu Koli | Sandai | Kattu | Seval Valarpu In Murai | Fighting Cock Food Training Types | Tamil | Nattu Kozhi Valarpu | Nattu Kozhi Pannai in Tamilnadu | Nattu Kozhi Chicks for Sale in Tamilnadu | Business Ideas Tamil | Murai 

215 comments:

  1. Good business ides about nattu koli valarpu

    ReplyDelete
    Replies
    1. nalla naatu koli kunju engu kidaikum

      Delete
    2. நாட்டு கோழி வளர்ப்பு தொழில் சேவல் சண்டை - Naatu Koli Valarpu Tholil Seval Sandai

      Delete
    3. நாட்டு கோழி வளர்ப்பு தொழில் saiya virumbuvoor thodarbu kollavum

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. where do we collect nattu kozhi chicks in namakkal , Salem? contact number

      Delete
    6. nattu koli kunchu matrum koli kitaikum 9943916321 karur

      Delete
  2. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Enaku nalla naatu koli kunju thevai . yaarai thodarbu kolvathu....

      Delete
    3. Naatu kozhi soup Vaipathu Eppadi

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. This comment has been removed by a blog administrator.

      Delete
    6. This comment has been removed by a blog administrator.

      Delete
  3. Give more Details About Naatu koli Valarpu

    ReplyDelete
    Replies
    1. நாட்டுக்கோழி வளர்ப்பு tholilil valara

      Delete
    2. naatu kozhi kulambu..... நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

      நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் அலெக்ஸ்

      Delete
    3. அலைக்ஸ் அவர்களே தங்களின் நாட்டு கோழி வளர்ப்பு கட்டுரையை படித்தேன் நான் இத்தொழிலை செய்ய விரும்புகிறேன். ஒரு சந்தேகம் குடியிருப்பு பக்கத்தில் இதனை செய்யலாமா. மேலும் குறைந்த முதலீடு எவ்வளவு தெளிவு படுத்துங்கள் அய்யா.
      எனது மெயில் : gbskmk@gmail.com

      Delete
    4. நோய் தடுப்புகோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோடைகால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும்.இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்புமண்டலமும் பாதிக்கப்படும். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது.தண்ணீர் குடிக்காது.வெள்ளையாக கழியும். எச்சமிடும்போது ஒரு காலை தூக்கிகொள்ளும்.ஒரு இறக்கை மட்டும் செயலிழந்து தொங்கும்.வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க குஞ்சு பொரித்த 7 நாட்களில் RDVF அல்லது Lasota என்ற் தடுப்பூசியை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் கண்ணில் விடவேண்டும்.இந்த தடுப்பு மருந்து இரண்டு மாதம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். 2 மாத வயதிற்க்கு பிற்கு RDVK என்ற் தடுப்பூசியை 8 சொட்டுகளை இறக்கையின் தோலுக்கடியில் போட வேண்டும். இந்த தடுப்பு மருந்து ஒருவருடம் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.பிறகு ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி போடவேண்டு


      நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

      Delete
    5. thoothukudi mavata siruvivasaigal kavanathirku........
      Rs 25,000 muthalitil 200 koligal valarkum alavu set amathu கோழி குஞ்சு supply seithu tharapadum... valarntha kolikalai engalidame virkalam.... thevai pattal feed supply seithu tharapadum... MARS micro farms.
      cantect: athij1985@gmail.com

      Delete
    6. Naatu kozhi Rasam Vaipathu Eppadi ?

      Delete
    7. This comment has been removed by a blog administrator.

      Delete
  4. useful post by tholil ulagam . more interested. i need more info about naatu koli

    ReplyDelete
    Replies
    1. நாட்டு கோழி வளர்ப்பு தொழில்

      Delete
    2. Dear sir,
      I Karthikeyan M.S.C(s.e) working in a IT company...but am really interested For This type of business..i will call you soon

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. DEAR FRIENDS

      I NEED DETAILS ABOUT CHICKS, I STARTED TO THIS BUSINESS IN SIVAGANGAI DISTRICT,PLEASE CONTACT ME 9003800765
      ARULRAJ
      SIVAGANGAI

      Delete
    2. nattu kozhi valarpu in tamil

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. குஞ்சுகள் பிறந்த கொஞ்சநாளயே இறக்கை தொங்கவைத்து இறந்துவிடுகிறது ,இதற்கு மருந்துஇ இருக்கா,

      கோழி அடை வச்ச 3, 4 குஞ்சு த பொரிக்குது ,இதை எப்படி சரி பண்றது ,ப்லீஸ் மைல் பண்ணுக்க.sabaigirinath.t@gmail.com

      Delete
    6. Sir enaku assel bread chicks vanum sir

      Delete
  6. nalla laabam tharuma naatu koli valarpu ?

    ReplyDelete
    Replies
    1. நாட்டுக் கோழி வளர்க்க விபரங்கள்;

      ◾கோழியும், தீவனமும் எளிதில் கிடைக்கக்கூடிய இடத்தில் பண்ணை அமைக்கவேண்டும்.
      ◾மின்சார வசதி கிடைக்குமாறு இருக்கவேண்டும்.
      ◾மழைக்காலங்களில் நீர்த் தேங்காமல் விரைவில் வடியக்கூடிய இடமாக இருக்கவேண்டும்.
      ◾குடி தண்ணீர் தாராளமாகக் கிடைக்கவேண்டும்.
      ◾நல்ல சந்தை சற்று தொலைவிற்குள் இருக்கவேண்டும். அதாவது சந்தைப்படுத்துதல் எளிதாக இருக்கவேண்டும்.

      Delete
    2. NADDU KOZHI KUNJUKAL MOTHTHAMA ENGEY KIDAIKKUM.... prabharaj0217@gmail.com

      Delete
    3. suya tholil enna vagaiyanathu seiyalam enbathu patri kooravum.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
  7. Naatu koli valarpirku etavathu payirchi tharuvangala.;;;;;;;

    ReplyDelete
    Replies
    1. Hy Sir
      I doesnt Have Any Idea about this
      So Can U Send Me an Brief Detail About This To

      Mail ID: nsrajesh@live.com

      Im Waiting For your Response Sir.

      Thank You.

      Delete
    2. please read my blog and if have any questions ask me

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
  8. natu kozhi kunju kidaikum edam ?

    ReplyDelete
  9. Dear friends.
    i am very interest to do the poultry farming,bcz my family are doing agriculture only,so i need some information about poultry farming and i want poultry model quotation in tamil format.can you help me plz....................Plz send the poultry quotation model to givn my email id.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  10. http://tholilvaaipugal.blogspot.in/2014/07/naatu-koli-valarpu.html

    naatu koli varuval seivathu eppadi?

    ReplyDelete
    Replies
    1. nattu koli kozhi pannai in chennai coimbatore

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  11. நாட்டு கோழி பண்ணை அமைக்க நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் பெற, இன்குபேட்டர் தேவைக்கும்

    நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான ஆலோசனைகளும் தொடர்பு கொள்ளவும்

    நாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  12. nattukoli pannai vaika virumbukiren pls give me details cell :9486971987

    Reply

    ReplyDelete
    Replies
    1. Naattu Kozhi - Backyard Chicken - Chicks for sale. ... Agri Green Neta, Bangalore, India | Buyers and sellers of hatching eggs and chicks.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. https://www.youtube.com/watch?v=G6yTh1yRYJI&list=PLAmDoy5JqX5SAW00FdbBTP8GKK1aPQJhj&index=3

      Delete
  13. naatu kozhi valarpu patri therivu padutiyatharku nandri. tamil ethu oru nalla tholil

    ReplyDelete
  14. naatu koli eppadi valarpathu?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. https://www.youtube.com/watch?v=G6yTh1yRYJI&list=PLAmDoy5JqX5SAW00FdbBTP8GKK1aPQJhj&index=3

      Delete
  15. naatu kozhi Rasam vaipathu eppadi endru solla mudiuma....

    ReplyDelete
  16. nattukoli kunju kidaikum edam therivupaduthavum .

    nattu kozhi valarpu in tamil

    ReplyDelete
    Replies
    1. நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

      நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR 9952831890

      Delete
    2. hi I AM IN SALEM .I HAVE NATTU KOLI MY NO;9788125385

      Delete
  17. nattu kozhi valarpu in tamil pdf ????

    ReplyDelete
  18. ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
    நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்

    suresh A- 9655783673

    ReplyDelete
  19. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  20. nattu koli pannai in tamilnadu. engu ullathu?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  21. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  22. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  23. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  24. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  25. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  26. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  27. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  28. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  29. koilkaluku varum nooi matrum treatment patri therinthu kola yeathavathu cources iruka my mobile no 9171564298 selva1586@gmail.com

    ReplyDelete
  30. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  31. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  32. Welcome to ARS Poultry Form;
    It is with great pleasure that we welcome to our ARS Farm.
    With more than 2 years of experience, Ars Poultry Farm is inaugurated for providing you with the best quality poultry products and our service as much as possible, by which all the poultry farmers will be extremely satisfied. Our ultimate aim is to make business bridge with the all types of poultry farmers and to fulfill their needs on daily basis.
    If we don’t have, please feel free to contact us on our contact , email or contact nos and also if you have any query or comments regarding our service or livestock products and equipments.

    Here we are looking forward to the opportunity for serving to all of poultry farm and all other needs at present and also in future.
    suresh A- 9655783673. Tirunelveli (Dist)


    ReplyDelete
    Replies
    1. குஞ்சுகள் பிறந்த கொஞ்சநாளயே இறக்கை தொங்கவைத்து இறந்துவிடுகிறது ,இதற்கு மருந்துஇ இருக்கா,

      கோழி அடை வச்ச 3, 4 குஞ்சு த பொரிக்குது ,இதை எப்படி சரி பண்றது ,ப்லீஸ் மைல் பண்ணுக்க.sabaigirinath.t@gmail.com

      Delete
    2. நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

      நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR 9952831890

      Delete
  33. sir, naan natu koli pannai vaika ullen. koli kunju vilai& theevanam patriya detail vendum.

    ReplyDelete
    Replies
    1. neenga endha ooru sir unga namela enakku oru friend irundhar avar thordarbillai adhaan sir

      Delete
  34. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  35. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  36. Happy New Year (2015) to All
    எங்களிடம் அனைத்து வகையான கோழிகளும் அசல் தரத்துடன் கிடைக்கும்.
    Country chicken
    Aseel chicken
    Chittang chicken
    Kadaknath Chicken
    ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
    நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.

    suresh A- 9655783673. Tirunelveli (Dist)
    Home Delivery

    ReplyDelete
  37. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  38. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  39. Naattu kozhi kunju thevai.please call me at 08050403450.

    ReplyDelete
  40. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  41. Suresh sir Can u mail me the price of Aseel,Chittang,Kadaknath chick price
    Mail me devasahayaraj@gmail.com

    ReplyDelete
  42. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  43. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  44. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  45. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  46. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  47. like to start koli pannai pls advice ramasamyselvaraj77@gmail.com

    ReplyDelete
  48. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  49. I NEED MORE DETAILS ABOUT CHICKS BUSINESS, I AM PLANING TO START THIS BUSINESS WITH SMALL AMOUNT AND IN PUDUKKOTTAI DISTRICT,PLEASE CONTACT ME : ncs.neel@gmail.com

    Thanks
    Neelakandan

    ReplyDelete
  50. Hello Everybody,
    My name is Mrs Anita. I live in UK London and i am a happy woman today? and i told my self that any lender that rescue my family from our poor situation, i will refer any person that is looking for loan to him, he gave me happiness to me and my family, i was in need of a loan of $250,000.00 to start my life all over as i am a single mother with 3 kids I met this honest and GOD fearing man loan lender that help me with a loan of $250,000.00 U.S. Dollar, he is a GOD fearing man, if you are in need of loan and you will pay back the loan please contact him tell him that is Mrs Anita, that refer you to him. contact Dr Purva Pius,via email:(urgentloan22@gmail.com)Thank you

    ReplyDelete
  51. எங்களிடம் அனைத்து வகையான கோழிகளும் அசல் தரத்துடன் கிடைக்கும்.
    Country chicken
    Aseel chicken
    Chittang chicken
    Kadaknath Chicken
    ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
    நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.

    suresh A- 9655783673. Tirunelveli (Dist)
    Home Delivery

    ReplyDelete
  52. If you need full detail about Nattukozhi pannai and Brooding go to our website
    http://thilsuresh.blogspot.in/

    ReplyDelete
  53. Hi I live in New York, could u pls give me a contact of Bala Murugan pls. Can u email at hiron.christopher@gmail.com or whatsapp +12019361063.
    Thanks

    ReplyDelete
  54. Hi, mr. Karthik I want 250 chicks(15daysaged) it's my cell no:9025211073 please contact me

    ReplyDelete
  55. நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

    நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR -9952831890

    ReplyDelete
    Replies
    1. நாட்டு கோழி குஞ்சிகள் விலை என்ன

      Delete
  56. நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

    நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR -9952831890

    ReplyDelete
  57. சுகாதாரம்


    கொட்டகையிலிருந்து அகற்றக்கூடிய தீவன, நீர்த்தொட்டிகள், கருவிகள், கூளங்கள் போன்றவைகளை நீக்கிவிட்டு ஒரு நல்ல கிருமி நாசினியைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தி கொட்டகையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒட்டுண்ணி மற்றும் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கவேண்டும். பழைய கூளங்களை நீக்கிவிட்டபின் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. தேவைப்படின் சிறிய அளவில் பூச்சிக்கொல்லியைப் புதிய கூளங்களுடன் கலந்து பயன்படுத்தலாம். மாலத்தியான் போன்ற மருந்தை தெளித்தோ, தூவிவிடுவதன் மூலமோ பேன், உண்ணி போன்ற ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தலாம்.

    நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

    நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR -9952831890


    ReplyDelete
  58. சுகாதாரம்


    கொட்டகையிலிருந்து அகற்றக்கூடிய தீவன, நீர்த்தொட்டிகள், கருவிகள், கூளங்கள் போன்றவைகளை நீக்கிவிட்டு ஒரு நல்ல கிருமி நாசினியைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தி கொட்டகையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒட்டுண்ணி மற்றும் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கவேண்டும். பழைய கூளங்களை நீக்கிவிட்டபின் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. தேவைப்படின் சிறிய அளவில் பூச்சிக்கொல்லியைப் புதிய கூளங்களுடன் கலந்து பயன்படுத்தலாம். மாலத்தியான் போன்ற மருந்தை தெளித்தோ, தூவிவிடுவதன் மூலமோ பேன், உண்ணி போன்ற ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தலாம்.

    நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

    நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR -9952831890

    ReplyDelete
  59. நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

    நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR 9952831890

    ReplyDelete
  60. எங்களிடம் அனைத்து வகையான கோழிகளும் அசல் தரத்துடன் கிடைக்கும்.
    Country chicken
    Aseel chicken
    Chittang chicken
    Kadaknath Chicken
    ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
    நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.

    suresh A- 9655783673. Tirunelveli (Dist)
    Home Delivery

    http://thilsuresh.blogspot.in/

    ReplyDelete
  61. I need 500 day old chick for meat purpose. Contact me @ 8056777783

    ReplyDelete
  62. விற்பனை
    -------------------
    குஞ்சுகள் வளந்த 80 மற்றும் 90 நாட்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம்,இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள்.மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் பக்கத்துக்கு நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று நண்பர் திருவேங்கடம் கூறுகிறார்.வியாபாரிகள் பொதுவாக கிலோ 140 முதல் 155 வரை கிலோவுக்கு கொடுப்பதாகவும் இவர் கூறுகிறார்.


    ப்ராய்லர் கோழி வளர்ப்பில் லாபம் பார்ப்பது என்பதும் இன்றைய சுழலில் பெரும் சவாலாகவே உள்ளது. தெரிந்த நண்பர் ஒருவர் ஏழு லட்சம் ருபாய் செலவு செய்து கொட்டகை அமைத்து ப்ராய்லர் கோழி வளர்த்து வந்தார் இப்பொழுது சுகுணா பாம்ஸ் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே குஞ்சுகள் தருகிறார்கள்(சில வியாபார நோக்கத்திற்காக),வருடத்திற்கு ஆறு மாதங்கள் அவரது கொட்டகை காலியாகவே உள்ளது
    suresh A- 9655783673. Tirunelveli (Dist)
    Home Delivery

    http://thilsuresh.blogspot.in/

    ReplyDelete
  63. நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் packiaraj- 9790604489

    ReplyDelete
    Replies
    1. nadu kozi sanda seval kidikum panruti 7373253541

      Delete
  64. This comment has been removed by the author.

    ReplyDelete
  65. Nanbargaley nan koli business start panna poren enna arivurai and ithai patri sollugal contact me phone:8190973116

    ReplyDelete
  66. Nanbargaley nan koli business start panna poren enna arivurai and ithai patri sollugal contact me phone:8190973116

    ReplyDelete
  67. I am very interesting to start this business now so You can explain me, How to sales this product. Phone number:- 9787226621.

    ReplyDelete
  68. I am very interesting to start this business now so You can explain me, How to sales this product. Phone number:- 9787226621.

    ReplyDelete
  69. enaku nattukozhi pannai amaika tharamana nattukozhikunjugal thevei plz contact my number :8056567795

    ReplyDelete
  70. van koli valarpu pathi sollavey illai

    ReplyDelete
  71. This is subramanian from salem.. really inspired by this artical
    i would like to make my own.
    Please call me 8056309899

    ReplyDelete
  72. How I Got My Loan From A Genuine And Reliable Loan Company

    I am Mrs.Irene Query i was in need of a loan of $150,000 and was scammed by those fraudulent lenders and a friend introduce me to Dr Purva Pius,and he lend me the loan without any stress,you can contact him at (urgentloan22@gmail.com) Approvals within 2-4 Hours


    1. Name Of Applicant in Full:……..
    2. Telephone Numbers:……….
    3. Address and Location:…….
    4. Amount in request………..
    5. Repayment Period:………..
    6. Purpose Of Loan………….
    7. country…………………
    8. phone…………………..
    9. occupation………………
    10.age/sex…………………
    11.Monthly Income…………..
    12.Email……………..

    Regards.
    Managements
    Email Kindly Contact:urgentloan22@gmail.com

    ReplyDelete
  73. அர்ஜினைன், கிளைசின், ஹிஸ்டிடின், லியூசின், ஐசோலியூசின், லைசின், மெத்தியோனைன், சிஸ்டைன், ஃபினைல் அலனின், த்ரியோனைன், டிரைப்டோபன் மற்றும் வெலைன் இவற்றில் மிக முக்கியமாகத் தேவைப்படுபவை அர்ஜினைன், லைசின் மெத்தியோனைன், சிஸ்டைன் மற்றும் டிரிப்டோபன்.

    விட்டமின்களும், தாது உப்புக்களும் ஆற்றலை அளிக்கவில்லை எனினும் உடல் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
    தேவையான முக்கிய தாதுக்கள்

    கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், தாமிரம், ஐயோடின், இரும்பு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம்.

    ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
    நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்
    நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான தகவல்கள்

    நாட்டு கோழி & நாட்டு கோழி குஞ்சு தேவைக்கு தொடர்பு கொள்ளவும் SANKAR -9952831890

    ReplyDelete
  74. Thanks for all your information.Website is very nice and informative content.


    Corporate Training Companies in Madurai

    ReplyDelete
  75. பண்ணை அமைக்க நாட்டுக்கோழி குஞ்சுகள் தேவைப்படுகிறது. ரமேஷ்-7639344258
    புதுக்கோட்டை

    ReplyDelete
    Replies
    1. நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் , நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் பெற தொடர்பு கொள்ளலாம்... நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான ஆலோசனைகளும் இவரிடம் பெறலாம்

      suresh A
      9655783673
      vallioor

      Delete
  76. Valartha piragu eppadi virpanai seivathu? neradi virpanai maiyam allathu kolmuthal maiyam irukiratha? advice me 8124263491

    ReplyDelete
  77. Good Day,

    Are you in any kind of financial difficulties? Your help comes now.
    Are you having sleepless night worrying how to get a Loan?Don't allow
    your dreams to die, or are you looking for whom to trust or having you been scammed by INTERNET fraud stars, or you have been turned down by other financial company contact
    JOYCE MYERS LOAN COMPANY today for
    easy and reliable loan. Please you are to fill out this form showed
    below this email.{{{finance2014911@gmail.com }}}

    BORROWERS APPLICANT FORM
    Full Names:............
    Gender:....................
    Marital status:.........
    Contact Address:...........
    Country:........................
    State:..........................
    Age:...........................
    Monthly Income:..............
    Loan Amount:...................
    Duration of Loan:............
    Date Of Loan Needed:.............
    Weekly Income:....................
    Occupation:.........................
    Purpose for Loan:.................
    Phone Number:....................
    Personal Phone Number:.........
    Fax Number:......................
    How Did You Hear About This Company?........

    ReplyDelete
  78. நாட்டு கோழி கிடைக்கும்
    9976139118

    ReplyDelete
  79. I want. 50 chicks pls contact me anybody around cuddalore. Pondicherry.virudachalam.chiambaram. sirkali.mayuram.pls contact 7502167588.8754884558.

    ReplyDelete
  80. Naatu koli kunju enakku thevai pls contact 9677973840 iam from trichy manapparai

    ReplyDelete
    Replies
    1. 7373253541,nadu kozi kunju sanda saeval kidikum

      Delete
  81. naattukoli kidaikkum thiruvarur contact no 9600823157

    ReplyDelete
  82. nattu Koli kidaikkum thiruvarur 9600823157

    ReplyDelete
  83. nattu Koli kidaikkum Thiruvarur contact number 9600823157

    ReplyDelete
  84. Nattu Kozhi Kidaikkum per kg Rs.250 Near thiruvannamalai and vandavasi people plz contact: 9942462458, 9500922363 engalidam sumar 500 kozhikal ullana

    ReplyDelete
  85. aseel original sengaruppu patta ragam seval kidaikkum matrum kunjikal 1month 2month 3month 6 to 1year seval mattrum pottai kozhikal kidaikkum salem contact 9952629900

    ReplyDelete
  86. நாட்டு கோழி கிடைக்கும்
    9962322988

    ReplyDelete
  87. Nattu Kozhi Kidaikkum per kg Rs.150 Near Chengalpet and uthiramerur plz contact: 9962322988 engalidam sumar 400 kozhikal ullana

    ReplyDelete
  88. Hello Everybody,
    My name is Mrs Sharon Sim. I live in Singapore and i am a happy woman today? and i told my self that any lender that rescue my family from our poor situation, i will refer any person that is looking for loan to him, he gave me happiness to me and my family, i was in need of a loan of S$250,000.00 to start my life all over as i am a single mother with 3 kids I met this honest and GOD fearing man loan lender that help me with a loan of S$250,000.00 SG. Dollar, he is a GOD fearing man, if you are in need of loan and you will pay back the loan please contact him tell him that is Mrs Sharon, that refer you to him. contact Dr Purva Pius,via email:(urgentloan22@gmail.com) Thank you.

    BORROWERS APPLICATION DETAILS


    1. Name Of Applicant in Full:……..
    2. Telephone Numbers:……….
    3. Address and Location:…….
    4. Amount in request………..
    5. Repayment Period:………..
    6. Purpose Of Loan………….
    7. country…………………
    8. phone…………………..
    9. occupation………………
    10.age/sex…………………
    11.Monthly Income…………..
    12.Email……………..

    Regards.
    Managements
    Email Kindly Contact: urgentloan22@gmail.com

    ReplyDelete
  89. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. எங்களிடம் அனைத்து வகையான கோழிகளும் அசல் தரத்துடன் கிடைக்கும்.
      Country chicken
      Aseel chicken
      Chittang chicken
      Kadaknath Chicken
      ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
      நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.
      தொடர்பு கொள்ளவும் 9566392372

      Delete
  90. நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் , நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் பெற தொடர்பு கொள்ளலாம்... நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான ஆலோசனைகளும் இவரிடம் பெறலாம்

    suresh A
    9655783673
    vallioor

    ReplyDelete
  91. I want to 100 chicks,thiruvallur dist,please sent message

    ReplyDelete
  92. நாடு கோழி பண்ணை அமைக்க எனக்கு லோன் வேண்டும் யாரோ அவனுக வேண்டும் என்னிடம் பண்ணை அமைக்க லேண்ட் இருகிறித்து அனல் பண்ணை அமைக்க பணம் இல்லை. நான் லோன் வாங்க யாரை அணுக வேண்டும். தகவல் தெரிந்தால் சொல்லுங்க

    ReplyDelete
  93. Hi Please share Bala murugan contact details to g_shanmuga@yahoo.com or whatsapp 8089371192

    ReplyDelete
  94. Do you need a quick long or short term loan with a relatively low interest rate as low as 3%? We offer Xmas loan, business loan, personal loan, home loan, auto loan,student loan, debt consolidation loan e.t.c. no matter your score, If yes contact us via Email: finance2014911@gmail.com Fill The Loan Application Form Below Name............ Amount Needed........ Duration.......... Country............ Monthly income....... Age............. Phone Number........ Sex ................. Email................Business Plan/Use Of Your Loan:....... Apply now on this email :finance2014911@gmail.com Warm Regards Dr Purva Sharegistry

    ReplyDelete
  95. Naattu Kozhi perunchathi 320rs

    ReplyDelete
  96. Sir/Madam
    I intrest this business so please help me then nattu kolzhi valarppu detail please my number 8098751082

    ReplyDelete
    Replies
    1. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

      Delete
  97. Sir/Madam
    I intrest this business so please help me then nattu kolzhi valarppu detail please my number 9791580805

    ReplyDelete
    Replies
    1. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

      Delete
  98. At vellore district i need to start naatu koli pannai.for this whom i have to contact? please contact me 8220232219,18. karthi_eee@hotmail.com

    ReplyDelete
  99. And also interested to muyal valarpu. please send relevent details about muyal valarpu at karthi_eee@hotmail.com 8220232219,18

    ReplyDelete
  100. I m in trichy Can you please let me know where to buy a nattu kolzi kunjukagal for sellers if you see this pls call me back Ph:8056702686

    ReplyDelete
  101. the extra features that make it hard for new customers to discover what's really valuable about the new, simplified solution.
     poradnik

    ReplyDelete
  102. I am in interested in kozhi valarpu any idea

    ReplyDelete
  103. I am in interested in kozhi valarpu any idea

    ReplyDelete
  104. Usefull news im interested in naatu kozhi
    thankyou

    ReplyDelete
  105. நண்பர்களே வணக்கம்,

    நாட்டு கோழி குஞ்சு வாங்க அணுகவும்
    கிருஷ்ணன்
    திருச்செங்கோடு.

    9442579369, 8940476876

    ஒரு நாள் குஞ்சு முதல் 10 நாள் குஞ்சு வரை கிடைக்கும்.

    1 நாள் குஞ்சு 60 ரூபாய்.
    10 முதல் 15 நாள் குஞ்சு 80 ரூபாய்.

    நாங்கள் நாட்டு கோழியை பரவலாக காட்டில் விட்டு தான் வளர்க்கிறோம், தற்போது மாதம் 200 குஞ்சுகள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. நேரில் வந்து குஞ்சு தரத்தை பார்த்து வாங்கலாம்.

    ReplyDelete
  106. நண்பர்களே வணக்கம்,

    நாட்டு கோழி குஞ்சு வாங்க அணுகவும்
    PK Country Chicken Farm.
    கிருஷ்ணன்
    திருச்செங்கோடு.

    9442579369, 8940476876

    ஒரு நாள் குஞ்சு முதல் 10 நாள் குஞ்சு வரை கிடைக்கும்.

    1 நாள் குஞ்சு 60 ரூபாய்.
    10 முதல் 15 நாள் குஞ்சு 80 ரூபாய்.

    நாங்கள் நாட்டு கோழியை பரவலாக காட்டில் விட்டு தான் வளர்க்கிறோம், தற்போது மாதம் 200 குஞ்சுகள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. நேரில் வந்து குஞ்சு தரத்தை பார்த்து வாங்கலாம்.

    தேவைபடுபவர்களுக்கு ஒரு மாதம் வளர்த்தி தரப்படும்.

    ReplyDelete
  107. This comment has been removed by the author.

    ReplyDelete
  108. நண்பர்களே வணக்கம்,

    நாட்டு கோழி குஞ்சு வாங்க அணுகவும்
    PK Country Chicken Farm.
    கிருஷ்ணன்
    திருச்செங்கோடு.

    9442579369, 8940476876
    Whatsup No. 8940476876
    Email. pkcountrychicken@gmail.com

    ஒரு நாள் குஞ்சு முதல் 10 நாள் குஞ்சு வரை கிடைக்கும்.

    1 நாள் குஞ்சு 60 ரூபாய்.
    10 முதல் 15 நாள் குஞ்சு 80 ரூபாய்.

    நாங்கள் நாட்டு கோழியை பரவலாக காட்டில் விட்டு தான் வளர்க்கிறோம், நேரில் வந்து குஞ்சு தரத்தை பார்த்து வாங்கலாம்.

    தேவைபடுபவர்களுக்கு ஒரு மாதம் வளர்த்தி தரப்படும்.

    ReplyDelete
  109. nattu koli kunji door teliver pannuvengala sir

    ReplyDelete
  110. Hi, I am interested in nattu kozhi farming, I am from vellore district is there anybody have farm near vellore ,I want to visit and get guidance for it. my mobile number 9626191530 (whatsapp also)
    my e-mail - karthickya10@gmail.com

    ReplyDelete
  111. I need of Kadaknath Chicks for our farm. Kindly contact my Mobile:9842897334 - whatsapp: 7418570600 - Near Bannari Temple, Sathyamangalam

    ReplyDelete
  112. I need sandakozhi.where available in chennai. Small chikes only contact number 7708768918

    ReplyDelete
  113. I need sandakozhi.where available in chennai. Small chikes only contact number 7708768918

    ReplyDelete
  114. 1 நாள் கோழி விலை=?
    7 நாள் கோழி விலை=?
    15 நாள் கோழி விலை=? ப்ளஸ் சொல்லுங்க நான் பணம் ரெடிபண்ணனும்

    ReplyDelete
  115. I want 50 chick in erode area

    ReplyDelete
  116. I WANT IDEA TO THIS BUSINESS ANYONE PLS HELP ME FOR THE DETAILS,MY NUM 8489627967.E-MAIL,brittofrancis8@gmail.com

    ReplyDelete
  117. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு,மற்றும் மீன் வளர்ப்பு போன்ற பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238

    ReplyDelete
  118. Report Bugs Topic tells about the bug reports of this blogs....


    Fencing Materials

    ReplyDelete
  119. koli thivanam saivadhu eppady

    ReplyDelete
  120. Awesome article! I want people to know just how good this information is in your article. It’s interesting, compelling content. Your views are much like my own concerning this subject. ソフト闇金

    ReplyDelete
  121. I’m going to read this. I’ll be sure to come back. thanks for sharing. and also This article gives the light in which we can observe the reality. this is very nice one and gives indepth information. thanks for this nice article... 借貸

    ReplyDelete
  122. I would recommend my profile is important to me, I invite you to discuss this topic... tech start-up names

    ReplyDelete