Sunday 17 August 2014

ரெடிமிக்ஸ் சிமென்ட், மணல், ஜல்லி



 ரெடிமிக்ஸ் சிமென்ட், மணல், ஜல்லி 


ரெடிமிக்ஸ் உங்க ஊருக்கு வந்தாச்சா..?

தொழில்

ரெடிமிக்ஸ்
உங்க ஊருக்கு வந்தாச்சா..? 
மி ன்னல் வேக முன்னேற்றம் இன்று கட்டுமானத் துறையில்!
பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது தளம் போடும் பணி. இரண்டாவது தளத்துக்கான கான்க்ரீட் போடவேண்டும். ஜல்லிக்கல் சப்ளை செய்பவர் இழுத்துக்கொண்டே இருக்கிறார். ஜல்லி டிமாண்ட் காரணமாக, விலையும் ‘ஜிவ்’வென ஏற... ஒருபக்கம் பட்ஜெட் கவலை... இன்னொருபக்கம், குறித்த நேரத்தில் தளம் போட்டாகவேண்டும் என்ற வீட்டு உரிமையாளரின் நெருக்குதல்... தவித்துப் போனார் இன்ஜினீயர் ராகவ்!
அவருடைய போன் ஒலிக்க... எதிர்முனையில் நண்பர் சுதர்சன். பேச்சு வாக்கில் தன் பிரச்னையைச் சொல்ல... சூப்பராக ஐடியா கொடுத்தார் அவர். ‘இதுக்கு ஏன் கவலைப்படறே! ரெடிமிக்ஸைக் கொண்டுவரச் சொல்லு! இரண்டு நாள் போடற தளத்தை, மூணே மணி நேரத்திலே முடிச்சுடுவாங்க. கலவையும் தரமா இருக்கும்’’ என்றார்.
‘‘இல்லையே! பட்ஜெட் கட்டுப்படியாகாதே...’’ என்று இழுத்தார் ராகவ்.
‘‘முயற்சிக்காமலே முடிவெடுக்காதே... சிமென்ட், மணல், ஜல்லி விலையை எழுது... அடுத்து, சித்தாள், மேஸ்திரி கூலி, அப்புறம் கலவை மெஷின் வாடகை... வேறென்ன செலவு... அதையும் பட்டியலில் சேர்த்துக்கோ! ரெடிமிக்ஸ் சப்ளை பண்றவங்ககிட்ட ரேட் விசாரி! ஒருவேளை அதைவிட ரெடிமிக்ஸ் ரேட் கொஞ்சம் கூடுதலா வந்தாலும் பரவாயில்லை. உனக்கு நேரம் மிச்சமாகுமே... அவசர நேரத்தில் பட்ஜெட் பார்க்கலாமா..? தாராளமாக வாங்கிடலாம்!’’ என்றார். சரி என்று விசாரித்தால், ரெடிமிக்ஸ் கான்க்ரீட் என்பது ஒரு க்யூபிக் மீட்டருக்கு சுமார் 3,000 ரூபாய் வரை என்றார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் நார்மலாக ஏற்படும் செலவைவிட, 5,000 ரூபாய் குறைவாகவே வந்தது. உடனே, ரெடிமிக்ஸ் கலவையை வாங்கினார்... வேலையை முடித்தார் ராகவ்.
ந கரங்கள் கான்க்ரீட் காடுகளாக மாறிக்கொண்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில், ரியல் எஸ்டேட் துறையினர் புதிய மாற்றங்களை வரவேற்கத் தயாராகிக்கொண்டே இருக் கின்றனர். ரோட்டை அடைத்து கல், மணல், சிமென்ட் கொட்டி கலவை கலந்து, எறும்பு வரிசை யாக சித்தாள்கள் சிமென்ட் சட்டிகளைக் கைமாற்ற, வாரக் கணக்காக தளம் போட்ட காலம் போயே போய்விட்டது. ஒரு போன் போட்டால், வண்டி நிறைய கலவை வருகிறது. அடுத்த போன் தகவலில் அந்தக் கலவையை பம்ப் செய்து மேலேற்றி, அதிகபட்சம் ஆறு மணிநேரத்தில் எவ்வளவு பெரிய தளத்தையும் போட்டு முடித்துவிடுகிற டெக்னாலஜி வந்துவிட்டது. இதன் பின்னணியில் இருப்பது ரெடிமிக்ஸ் கலவை!
சின்னச் சின்ன சிக்கல்கள் தான் திடீர் புதுமைகளைக் கொண்டுவரும் என்பதில் ரெடிமிக்ஸ் மாற்றமும் ஒன்று!
நெருக்கமான தெருக்கள், சதா வாகனப் போக்குவரத்து, ஆட்கள் போதாத நிலை, கலவைப் பொருட்களில் ஏதாவது ஒன்றுக்கு திடுமென ஏற்படும் தட்டுப்பாடு என்று கட்டடத் துறையில் பல சிக்கல் கள். இந்தக் கவலையைப் போக்க வந்திருக்கிற ரெடிமிக்ஸை, செட்டிநாடு சிமென்ட், டால்மியா சிமென்ட் உள்ளிட்ட பல பெரிய சிமென்ட் நிறுவனங்களே பிளான்ட் போட்டு கலவையைத் தயாரித்து விற்க முன்வந்திருக்கின்றன. இதுதவிர, கட்டடத் துறையில் புகழ்பெற்ற எல் அண்ட் டி போன்ற நிறுவனங்களும் கலவையை கலந்து சப்ளை செய்யும் பிளான்ட்களை வைத்திருக் கின்றன.
‘‘இந்தக் கலவைகளில் என்ன விகிதத்தில் மணல், சிமென்ட், கற்கள் சேர்க்கவேண்டும் என்று கம்ப்யூட் டரில் புரோகிராம் செய்துவிட்டால், துளி பிசிறு இல்லாமல் கலவை இயந்திரம் கலந்து கொடுத்துவிடும். இதனால், பில்டர்களுக்கு ரெடிமிக்ஸ் கலவை மேல் அதீத நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் செட்டிநாடு சிமென்ட் சார்பாக நிறுவப்பட்டிருக்கும் ரெடிமிக்ஸ் பிளான்ட்டின் மேனேஜர் வி.சங்கரதாஸ்.
கலவைக்குத் தேவையான சிமென்ட் மூட்டைகளை அடுக்கவும், பல லாரி மணல் மற்றும் ஜல்லியைக் கொட்டி வைக்கவும் சுமாராக 10 கிரவுண்ட் இடமும் இவற்றை வாங்கி ஸ்டோர் செய்துகொள்ள சுமார் ஒரு கோடி ரூபாய் வரையான முதலீடும் தேவைப்படும். இதில் அந்த பிளான்ட் மெஷினின் விலையும் அடங்கும். கலவையை எடுத்துச்செல்ல லாரிகள் கைவசம் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால், வாடகைக்கு லாரி தர ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிளான்ட் அமைப்பதற்கு நான்கைந்து பேர் ஒன்றாக முதலீடு செய்து, பார்ட்னர்ஷிப் முறையிலும் தொழில் செய்யலாம். இதற்கு வங்கிக் கடனும் கிடைக்கும். இதிலேயே கலவையை எடுத்துச்செல்லும் வாகனங்களை வாங்கி, அதை வாடகைக்கு விட்டும் சம்பாதிக்கலாம். இதுதவிரவும் கலவை டெலிவரி செய்யும் இடத்தில், அதாவது தளம் போடும் இடத்தில் ஒரு வருமான வாய்ப்பு இருக்கிறது. அது - கலவையைக் கட்டடத்தின் மேலே கொண்டு செல்லும் பம்ப்பிங் மெஷின் வைத்துக்கொள்வது!

முதல் மாடிக்கு தளம் போடுவதைவிட, இரண்டாவது மாடிக்கு சற்று கூடுதல் செலவு பிடிக்கும். ஐந்தாவது மாடி என்றால் இது கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். உயரம் செல்லச் செல்ல, கலவையை சுமந்து செல்ல ஆள்கூலி பெருகுவதால் வரும் செலவு இது! லேட்டஸ்ட் நிலவரப்படி, லாரியில் உள்ள ரெடிமிக்ஸ் கலவையை, பம்ப்பிங் மெஷினில் போட்டால் அது ரப்பர் குழாய் வழியே மேலே தள்ளி தேவைப்படும் தளத்தில் டெலிவரி செய்கிறது. பத்து, இருபது மாடிகள் என்று அநாயசமாக எழும்பும் இந்தக் காலகட்டத்தில் இந்த முறையில்தான் தளம் போடுகிறார்கள். மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் இருக்கும் உலகின் இன்றைய மிக உயர இரட்டைக் கோபுரங்களான ‘பெட்ரோனாஸ் டவர்ஸ்’ இப்படித்தான் தளமிடப்பட்டது. இந்த பம்ப்பிங் மெஷின்கள் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் உயரம் வரை கலவையைத் தள்ளிச் செல்லும்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் இதுபோன்ற கலவை இயந்திரங்களையும் பம்ப்பிங் மெஷின்களையும் தயாரிக்கும் ‘ஸ்விங் ஸ்டெட்டர்’ நிறுவனம் இருக்கிறது. கோலாலம்பூர் ‘பெட்ரோனாஸ் டவர்ஸ்’ கோபுரத்தைக் கட்டப்பட்டதே இவர்களது நிறுவன இயந்திரங்களைக் கொண்டுதான்! ஜெர்மனியைத் தலைமை இடமாகக் கொண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு இந்திய கிளையும் இருக்கிறது. இந்தியாவின் கட்டுமானத்தில் 90% பங்களிப்பு செய்யும் இதன் நிர்வாக இயக்குநர் ஆனந்த் சுந்தரேசன், ‘‘மிகப் பிரமாண்டமாக வளர்ந்துவரும் தொழில் இது. 1999-ல் 27 ஊழியர்களுடன் துவங்கப்பட்டு, இன்று 460 ஊழியர்கள்... டர்ன் ஓவரில் பல மடங்கு வளர்ச்சி... என்று நாங்கள் அடைந்துள்ள முன்னேற்றமே இதற்கு சாட்சி. எங்கள் ஃபேக்டரியில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆறு ரெடிமிக்ஸ் இயந்திரங்களைத் தயார் செய்ய முடிகிறது. இந்த அளவுக்கு மார்க்கெட்டில் டிமாண்ட் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே கட்டடத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும் தேவையும் இதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம். அடுத்த 10 வருடங்களில் இந்த வளர்ச்சி மேலும் பல மடங்கு அதிகமாகும் என்பது எங்கள் கணிப்பு’’ என்கிறார்.
இவர்களது நிறுவனமே பம்ப்பிங் மெஷின்களையும் தயார் செய்கிறது. ‘‘திருச்சி, மதுரை, சேலம், கோவை போன்ற நகரங்களில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி இருப்பதால், அங்கெல்லாம் புதியவர்கள் பலர் இத்தொழிலுக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். பிளான்ட்களில் இருந்து கான்க்ரீட்டைக் கொண்டு செல்லும் டிரக்குகளை வாங்கி வைத்து, அதில் வாடகை வருமானம் பார்க்கிற இளைஞர்களும் இருக்கிறார்கள். ரெடிமிக்ஸின் வளர்ச்சி, ஆட்டோமொபைல் துறைக்கும் பெரிய அளவில் உதவி இருக்கிறது.
கட்டுமானத் துறையில் இருக்கிற பெரிய நிறுவனங்கள் சில, தங்களுக்கென பிளான்ட் வைத்திருக் கிறார்கள். சிலர் கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டை முடக்க விரும்பாமல், எப்போதெல்லாம் சிமென்ட் தேவையோ, அப்போதைய தேவைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். அனைவரும் இந்த ரெடிமிக்ஸ் பக்கம் திரும்பக் காரணம், இந்த சிமென்ட் கலவையின் நம்பகத் தன்மையும் அதன் அதிகமான உழைக்கும் காலமும்தான். இந்தக் கலவைக்கான ஃபார்முலாவை ஒரு முறை பிளான்ட்டில் பதிவு செய்துவிட்டால், அதை மாற்ற 7 விதமான பாஸ்வேர்ட்கள் தேவைப்படும்’’ என்றார் ஆனந்த் சுந்தரேசன்.
இவரது இண்டஸ்ட்ரி தொடர்பான பணிகளைக் கற்றுத்தரும் பயிற்சி வகுப்பு ஒன்றையும் இவர்களது வளாகத்திலேயே துவங்கி இருக்கிறார்கள். 30 பேர் கொண்ட டீம் இந்த கோர்ஸை முடித்து மிக கட்டுமானத்துறை பணிகளில் செட்டில் ஆகி இருக்கிறார்கள்.
தமிழகத்தின் இரண்டாம் நகரங்கள்கூட கட்டுமானத்துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றன. வீடு கட்டுபவர்களாக இருந்தாலும் சரி, வருமானம் பார்க்க ஆசைப்படுபவர்களாக இருந்தாலும் சரி - அனைத்து நகரத்து மக்களும் கட்டுமானத் துறையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் வரப்பிரசாதமாகவே இருக்கிறது ரெடிமிக்ஸ் துறையின் வளர்ச்சி.
ரெ டிமிக்ஸ் மெஷின்கள் சுமார் பத்தடி உயரம் கொண்டவையாக இருக்கின்றன. இதன் உள் அமைப்பு ஸ்பிரிங் வளையங்கள் போன்ற அமைப்பில் இருக்கிறது. ‘‘இதனுள் 6 டன் அளவு வரை கலவைகளை ஸ்டோர் செய்யமுடியும். சுமார் 6 மணி நேரம்வரை கலவைகள் உடனே கெட்டிப் பட்டுப் போகாமல் இருக்க... ஸ்பெஷல் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. அதேசமயம், லாரியில் ஏற்றப் பட்ட நிமிஷம் முதலே இந்த கன்டெய்னர் உருளை சுற்றிச் சுழன்றுகொண்டே இருக்கும். சாலைகளில் போகும் ரெடிமிக்ஸ் லாரிகளின் பின்பக்கம் இருக்கும் இந்த உருளைகள் சுற்றிக்கொண்டிருந்தால் லோட் செய்யப் பட்டிருக்கிறது என்றர்த்தம்’’ என்கிறார் ஆனந்த் சுந்தரேசன்.

1 comment:

  1. Idea sooper ji..I'm impressed. But..money is more important. I'm here to work with my brain and body.anyone interest to invest this project.. Contact me

    ReplyDelete