Saturday 31 May 2014

தொழில் தொடங்க கடன் உதவி

சுயதொழில் தொடங்க 25ரூ மானியத்துடன் கடன் உதவி சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு      

சென்னை, மே 21- சென்னை மாவட்டத் தில் பிரதமரின் வேலை வாய்ப்பு பெருக்க திட் டத்தின் கீழ் சுயமாக தொழில் தொடங்க 25 சதவீத மானியத்துடன் ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு சுயவேலைவாய்ப்பு அளிக்கவும், வேலை வாய்ப்பை அதிகரிக்க வும் பிரதமரின் வேலை வாய்ப்பு பெருக்க திட் டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்க சென்னை மாவட்டத் திற்கு நடப்பு நிதி ஆண் டுக்கு ரூ.85.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 36 நபர் களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு இருக்கிறது.
இந்த திட்டத்தில், உற்பத்தி சார்ந்த தொழில் களுக்கு அதிகபட்சம் ரூ.25 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட் சமும் கடன் பெறலாம். உற்பத்தி திட்டம் தொடர் பான திட்டத்தொகை ரூ.10 லட்சத்திற்கு மேலும், சேவை தொழில் தொடர் பான திட்டத்தொகை ரூ.5 லட்சத்திற்கு மேலும் இருந்தால் அத்தகைய தொழில்களுக்கு கடன் உதவி பெற விண்ணப் பிப்போர் குறைந்தபட் சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடன் பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு கிடையாது.
தனிநபர்கள், தொழில் முனைவோர்கள், உற் பத்தி கூட்டுறவு சங்கங் கள், சுய உதவிக்குழுக் கள், அறக்கட்டளைகள் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். பொதுப் பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்ட கடன் தொகை யில் 15 சதவீதமும் சிறப்பு பிரிவினர்களான பிற் படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர், பழங்குடி யினர், சிறுபான்மையி னர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோ ருக்கு 25 சதவீத மானி யமும் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப் பத்தை சென்னை கிண்டி தொழிபேட்டையில் உள்ள தொழில் வர்த்த கத்துறை இணை இயக் குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். கடைசி தேதியான ஜூன் மூன்றாம் தேதி வரை பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் கள் மட்டுமே நேர் காணல் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதுதொடர்பாக கூடு தல் விவரங்கள் அறிய 04422501621, 22501620 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
- இவ்வாறு ஆட்சியர் சுந்தரவல்லி கூறி உள்ளார்.

No comments:

Post a Comment